districts

img

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பாராட்டு

திண்டுக்கல், மே 23- பத்தாம் வகுப்பு தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று  சாதனை படைத்த பார்வை திறன் குறைந்த திண்டுக்கல் மாணவர் சிவரஞ்சனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தினர் பாராட்டினர்.  திண்டுக்கல் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த ஓவியர் விஜயகுமாரின் மகன் சிவரஞ்சன்.இவர் மதுரை மாவட்டம்  பரவையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் 10 ஆம்  வகுப்பு படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 455 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தமிழில்  96, ஆங்கிலத்தில் 87, கணிதத்தில் 87, அறிவியலில் 92,  சமூக அறிவியலில் 93, என மொத்தம் 455 மதிப்பெண்கள் பெற்றார். மாணவர் சிவரஞ்சன் தேர்ச்சி குறித்து அறிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாநகரத்தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று சால்வை அணிவித்தும், தந்தை பெரியார் புத்தகத்தை பரிசாக கொடுத்து, இனிப்பு வழங்கி  பாராட்டினர். நகரத்தலைவர் வைத்திலிங்க பூபதி. நகரச்  செயலாளர் கவிஞர் தாமோதரன், பொருளாளர் கோபால்,  சிறுகதை எழுத்தாளர் அப்துல்காதர், சிறுமணி (கட்டு மானம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவரஞ்சனின் தாய் சித்ரா மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.  இராஜபாளையத்தில் கபடிப்போட்டி