மதுரை, ஆக.7- தென் மண்டல ஐ.ஜி ஆக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்ற வர். தொடர்ந்து செய்தியார்களி டம் பேசிய அவர், தென் மாவட்டங் களில் கஞ்சா விற்பனை தடுப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார். மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட் டங்களை உள்ளடக்கிய தென் மண்டல காவல்துறைத் தலைவராக பதவி வகித்த அஸ்ராகார்க் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தென்மண்டல புதிய காவல்துறை தலைவராக மதுரை மாநகர காவல் ஆணையர் கே.எஸ். நரேந்திரன் நாயர் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள தென்மண்டல காவல்துறை தலை வர் அலுவலகத்தில் கே.எஸ்.நரேந்திரன் நாயர் பொறுப் பேற்றுக் கொண்டார். முன்னதாக பணிமாறுதல் செய்யப்பட்ட அஸ்ரா கார்க், புதிய தென் மண்டல காவல்துறைத் தலைவராக திங்களன்று பொறுப்பேற்ற நரேந்திரன் நாயருக்கு வாழ்த்து தெரிவித்தார். மதுரை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்கும் வரை, மாநகர் காவல் ஆணையராக வும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறேன் என்றார்.