திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் மழலையர் பள்ளியில் மழலையர் வகுப்பு முடிந்து தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் எம். ராணி தலைமையில் நடைபெற்றது. டாக்டர் மௌசிகாசுபாசினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மழலையர் வகுப்பு முடிந்து தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மழலையர் பட்டம் வழங்கினார். பள்ளியின் தாளாளர் முருகேசன் உள்ளிட்ட ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.