கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப்பெருட்களைக் கொண்டு கைவினைஞர்களின் பாரம்பரிய திறமைகளை வெளிக்கொணர்ந்து, வேலை வாய்ப்பினை உருவாக்கி, அவர் தம் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் 1960ல் உரு வாக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் சோப்பு, காலணி, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட 35 கிராமத் தொழில் உற்பத்தி அலகுகள் இயங்கி வரு கின்றன. அவற்றில் ஒன்று கைமுறை காகித உற்பத்தி. தமிழகத்தில் 15 கைமுறை காகித உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வந்தன. இங்கு உற்பத்தியாகும் கச்சா அட்டைகள் மத்திய சிறைச்சாலைக்கும், எக்ஸ்ரே உறைகள் அரசு மருத்துவமனைகளுக் கும், அலுவலக உறைகள், கோப்பு அட்டை கள் மற்றும் மெல்லிய உறைகள் அரசு துறைகளுக்கும், பாண்ட் தாள்கள் நீதி மன்றங்களுக்கும் தேவையின் அடிப்படை யில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த அலகுகள் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வந்ததாக 1999 டிசம்பர் முதல் நிரந்தரமாக மூடப் பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கைவினை ஞர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றனர். வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்ற நிலை யில் நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு சாத மாகத் தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு அன்று வேலையிலிருந்த தொழிலாளர்க ளுக்கு மீண்டும் பணி வழங்க 15ல் 3 அலகு கள் மட்டும் திறக்கப்பட்டது. அதில் ஒன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட் டத்திலுள்ள செண்பகப்புதூரில் இயங்கி வருகிறது.
கடந்த 1999 முதல் 2006 வரை பணியி ழந்த 85 மாதங்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்தது. இதனைத்தொடர்ந்து நடை பெற்ற பேச்சுவார்த்தையில் 35 விழுக் காடு நிலுவை தொகை வழங்கப்படும் என உடன்பாடு ஏற்பாடு ஏற்பட்டது. அதற்கான ரூ.85 லட்சத்தை வட்டியில்லா கடனாக அரசு வாரியத்திற்கு வழங்கும் என அரசாணை யும் வெளியிடப்பட்டது. ஆனால் அதன்படி எந்த தொகையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. பயிற்சியாளர்களாகவே தொடரும் இத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டமும் அமலாகவில்லை. அக விலைப்படி உயர்வும் வழங்கப்பட வில்லை. இவ்வாறு சொற்ப ஊதியத்தில் செண்பகபுதூரில் 20 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 20ல் 4 பேர் உள்ளுர்க்காரர்கள். திருச்சி மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் 9 பேர், தஞ்சாவூரிலி ருந்து ஒருவர், தூத்துக்குடியிலிருந்து 2 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.
துணி வெட்டுபவர், லிப்டர், கோச்சர், தரம் பிரிப்பது வஜ்ரம் பசையூட்டுவது, பள பளப்பாக்குவது, உற்பத்தியான காகிதங் களை வெட்டுவது, தரம்பிரிக்கும் தாள் களில் தவிர்க்கப்படுவதை கோடு போட்ட, போடாத புத்தகங்களாக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வரு கின்றனர். ஊதியமாக மாதமொன்றிற்கு ரூ.7000 வரையே கிடைக்கிறது. விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உள்ளிட்டவற்றிற் கும் இத்தொழிலாளர்கள் பெரும் ஊதியத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என லாம். இந்நிறுவனத்தின் கட்டுமானங்கள், தளவாட பொருட்கள் உள்ளிட்டவை பரா மரிப்பில்லாமல் சிதைவுற்று வருகிறது. அது போல தொழிலாளர்களையும் தவிக்க விட் டுள்ளது கதர் வாரியமும், அரசும்! கைதூக் கிவிட கரம் நீளும் என்கிற நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தி வருகின்றனர் இத் தொழிலாளர்கள்.
-சக்திவேல்