districts

img

போதை எதிர்ப்பில் உலகுக்கே முன்மாதிரி கேரளம்

திருவனந்தபுரம்,நவ.2-   போதைப் பொருளுக்கு எதிராக செவ்வாயன்று (நவ 1) கேரளா மேற்கொண்ட நடவடிக்கை உலக முன்மா திரி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கூறினார். திருவனந்தபுரம் பாளை யம் தியாகிகள் மண்டபத்தில் நடந்த போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியின் மாநில அளவிலான துவக்க விழா வில் அமைச்சர் பேசியதா வது: உலகில் பல நாடுகள் போதைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தாலும், கேரளா இதில் தனித்துவத்துடன் விளங்குகிறது. மாநிலத்தில் உள்ள 20,000 வார்டுகளில் கட்சி அரசியல், ஜாதி வேறுபா டின்றி சுமார் ஒரு கோடி பேர் போதை ஒழிப்புப் பிரச்சாரத்தில் களமிறங்கி யுள்ளனர். போதைப்பொரு ளுக்கு எதிரான நடவ டிக்கைகளை மேலும் ஒற்றுமையுடன் முன்னெடு த்துச் செல்ல முடியும் என்றார் அமைச்சர்.