districts

img

விருதுநகரில் காரல் மார்க்ஸ் பிறந்த தினம்

விருதுநகர், மே.5- மனித குலத்தின் விடுதலைக்காக உழைத்திட்ட மாமேதை காரல் மார்க்சின்  204 ஆவது பிறந்த தினம் உலகம் முழு வதும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், முன்னாள் மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரணி யன் மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சூலக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வி.கற்பூரம் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெ.ஜே.சீனிவாசன், ஏ.எம்.மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.