நாகர்கோவில், பிப்.12- கன்னியாகுமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சாம்புறம் ஏ கிளையின் முன்னாள் செயலாளர் மணி என்னும் கோபாலகிருஷ்ணனின் சனியன்று (பிப்.12) மஞ்சள் காமாலை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சிதம்பர கிருஷ்ணன், வட்டாரக் குழு செயலாளர் அலெக்ஸ், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.