districts

img

கண்ணகி கோவில் விழா தேனி-இடுக்கி ஆட்சியர்கள் ஆலோசனை

குமுளி, ஏப்.17- தமிழக எல்லையான கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையில் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஒவ் வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர்ணமி அன்று இங்கு திருவிழா நடைபெறும். இதற்கு முன்னதாக தமிழக,  கேரள அதிகாரிகள் சார்பில் முன் னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி தேக்கடியில் உள்ள மூங்கில் தோட்ட வனத்துறை விடுதி அரங் கில் கூட்டம் நடைபெற்றது. தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ஆர்வி.ஷஜீவனா, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மங்கலதேவி கண்ணகி அறக் கட்டளை சார்பில் மூன்றுநாட்க ளுக்கு திருவிழா நடத்த வேண்டும். மாலை 4 மணி வரை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். ஜீப்களுக்கு அனுமதி அட்டை பெறு வதில் உள்ள சிரமத்தைப் போக்க  வேண்டும். பக்தர்களிடம் கேரள  வனத்துறையினரின் கெடுபிடி களை தளர்த்த வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பின்பு தேனி  ஆட்சியர் ஆர்வி.ஷஜீவனா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

காலை ஆறு மணிக்கு வழிபாடுகள் தொடங்  கப்படும் பிற்பகல் 2.30 மணி வரை  கோவிலுக்குச் செல்ல அனும திக்கப்படுவர். மாலை 5.30 மணிக் குள் பக்தர்கள் அனைவரும் வனப்  பகுதியை விட்டு வெளியேற  வேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, ஜீப்களுக்கான தகுதிச்சான்று  மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை குமுளியில் வழங்கப்படும். தமிழகத்தில் பளியன்குடி, தெள் ளுக்குடி பாதையில் இதய மருத்து வக்குழுவினர் முகாமிட ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. தமிழகம்,கேர ளம் மற்றும் கோயில் சார்பில் மூன்று பொங்கல் வைக்கப்படும். தனி நபர்கள் பொங்கல் வைக்க அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறி னார். இதுகுறித்து பக்தர்கள் கூறு கையில், கோயிலுக்குச் செல்  லும்நேரம் பிற்பகல் 2.30மணியுடன் முடிவதால் நெரிசல் ஏற்பட்டு பெரும் சிரமம் ஏற்படும். நேரத்தை நீட்டிக்க வேண்டுமென்றனர். செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு கூட்டம் தொடங்கிய போது கேரள செய்தியாளர்கள் அனு மதிக்கப்பட்டனர். ஆனால் தமிழக செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகக் கூறி கேரள காவல்துறையினர் அனுமதி  அளிக்கவில்லை. இதனால் செய்தி யாளர்கள் மறியல்போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக் கத்தில் புகைப்படம், வீடியோ மட்டும் எடுத்துக் கொள்ள அனு மதிக்கப்பட்டனர்.