districts

img

12 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய கண்மாய் விவசாயிகள் மகிழ்ச்சி

நத்தம், ஜன.2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி அருகே உள்ளது காட்டுப்பெரியகுளம் கண்மாய் . பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. புன்னப்பட்டி திருமணி முத்தாறு செக் டேமிலிருந்து மதகு வழி யாக பிரிக்கப்பட்ட தண்ணீர் பண்ணு வார்பட்டி வழியாக வந்து இந்த கண்மா யில் சேரும்.  இந்நிலையில் கடந்த 12 ஆண்டு களுக்கும் மேலாக போதிய மழை இல்லா ததால் இந்த காட்டுபெரியகுளம் நிரம்ப வில்லை. கடந்த இரண்டு நாட்களாக நத்தம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகமாகி காட்டுப் பெரியகுளம் நிரம்பியது.  இதை திமுக தெற்கு ஒன்றிய செய லாளர் ரத்தினக்குமார் மற்றும் அப்பகுதி யை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்க ளும் மலர் தூவி வரவேற்றனர்.