districts

img

கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய காஞ்சிரங்கால் ஊராட்சித் தலைவர்

சிவகங்கை, ஆக.20- சிவகங்கை மாவட்டம் ,காஞ்சிரங்காலில் உள்ள ஆதிதிராவிட நல கல்லூரி மாணவிகள் விடுதிக்கு காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ,ஆதி திராவிட நலக்குழு மாவட்ட சேர்மனுமான வழக்கறிஞர் மணிமுத்து ரூ33 ஆயிரம் மதிப்பில் புத்த கங்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், இங்கு உள்ள விடுதி மாணவி கள் கடந்த ஆண்டு சேர்ந்த வர்கள். தொடர்ந்து படிப்ப தற்கு விடுதியில் அதே எண்ணிக்கையில் இடம் வேண்டும் என ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அதி காரி சிவக்குமாரிடம் வலி யுறுத்தினேன். ஆதி திரா விடர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதியில் உட்கார்ந்து சாப்பிட இருக்கை வசதி வேண்டும். நூலகம் வேண்டும். விளை யாட்டு மைதானம் வேண் டும். கடந்த ஆண்டும்,இந்த ஆண்டும் சோப், எண்ணெய் வாங்கிக்கொள்ள மாணவி களிடம் வங்கி விபரம் வாங்கி யிருக்கிறார்கள்.ஆனால் பணம் வழங்கவில்லை. மாணவிகள் படிக்க நூல கம் அமைக்க வேண்டும். .குடிதண்ணீர் வசதி செய்து  தரவேண்டும். விடுதி மாண விகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஆதி திராவிடர் நலத்துறை  மாவட்ட அதிகாரி சிவக்குமா ரிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார்.