districts

img

காஞ்சிரங்கால் ஊராட்சித்தலைவருக்கு விருது அமைச்சர், ஆட்சியர் பாராட்டு

சிவகங்கை, மே 5-  சிவகங்கை அருகே யுள்ள காஞ்சி ரங்கால் ஊராட்சி யில் மாவட்ட ஆட்சி யர் பி.மதுசூதன் ரெட்டி ஆலோச னைப்படி ரூர்பன் திட்டத்தில் ரூ.66 லட்  சத்தில் உணவு, காய்கறி கழிவுகள் மூலம்  மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை ஊராட்  சித் தலைவர் மணிமுத்து ஏற்படுத்தினார். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, அருகேயுள்ள சிவகங்கை நகராட்சி பகுதி களில் இருந்து தினமும் காய்கறி, கோழி,  மீன் போன்ற உணவுப்பொருள் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பிறகு அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகின்றனர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறு கிறது. பிறகு அதன்மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு 2 டன் கழிவுகள் மூலம் 220 கிலோ வாட் வரை மின்சாரம் தயா ரிக்கின்றனர். இந்த மின்சாரத்தை காஞ்சி ரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள், குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களில் பயன்படுத்தி வரு கின்றனர். இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்  டத்துக்காக அதே ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம்  தேதி அந்த ஊராட்சித் தலைவர் மணி முத்துவை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். இந்நிலை யில் நேற்றுமுன்தினம் பிரதமரின் 100-வது  மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக சென்னை ஆளுநர் மாளிகையில் நடை பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சிறந்து  விளங்கி பிரதமர் மோடியால் பாராட்டப் பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி பாராட்டினார். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மணிமுத்து கூறுகையில், காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு விருது கிடைத்திருப்பது எங்க ளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காஞ்சி ரங்கால் ஊராட்சியில் மட்டும் தினமும் 100 கிலோ உணவு, காய்கறிக் கழிவுகள் கிடைக்கின்றன. இதுதவிர சிவகங்கை நக ராட்சி பகுதியில் இருந்தும் பெறுகிறோம். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், மாவடட்ட ஆட்சியர் மதுசூ தன்ரெட்டி பாராட்டி வாழ்த்தினர் என்று தெரிவித்தார்.