தேனி, ஜூன் 20- நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத தால், நீர் வரத்தின்றி பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர் . வைகை அணையில் இருந்து கடந்த ஆண்டு, முதல் போகம், இருபோகம், ஒரு போகம், 58 ஆம் கால்வாய், ஆற்றுப்பாச னம் என அனைத்து பகுதிகளுக்கும் தண் ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்கே தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வைகை அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாத தால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 51 அடியாக குறைந் துள்ளது. வைகை அணை முழுக்கொள்ள ளவை எட்டும் போது மொத்தமாக 6 ஆயி ரத்து 91 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது வைகை அணையில் 2 ஆயிரத்து 146 மில்லியன் கன அடி தண்ணீர்,அதாவது 40 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதி யிலான வருசநாடு, வெள்ளிமலை, அர சரடி, பொம்மராஜபுரம், மூலவைகை ஆறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாமல் உள்ளது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. வைகை அணையில் இருப்பில் உள்ள தண்ணீரை மதுரை, சேடப்பட்டி, ஆண்டி பட்டி, பெரியகுளம், தேனி ஆகிய பகுதி களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன் படுத்தப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கும் பட்சத்தில் முதல் போகத்திற்காக அடுத்த மாத தொடக்கத் தில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ள தாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செவ்வாய்க்கிழமையன்று நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 51.15 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து குடிநீ ருக்காக 69 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெரியாறு அணை
இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 118.45 அடியாக இருந்தது. அணை யில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு அணை பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. தென் மேற்கு பருவமழையும் தீவிரம் அடையா மல் உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அணையின் நீர் மட்டம் 116.75 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலை யில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயப் பணிகள் பாதிப்பு நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம் அடைந்துள்ளனர். வீரபாண்டி, உப்பார்பட்டி, சின்னமனூர் உள்பட பல இடங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே உழவுப் பணிகள் செய்த நிலையில், இன்னும் நாற்றாங்கால் கூட அமைக்காமல் விவசாயிகள் பலர் உள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் 108 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் அணையின் சுரங்கப் பகுதி வழியாக தமி ழகத்துக்கு திறக்கப்படும் மதகுகளுக்கு தண்ணீர் வரும். இன்னும் 9 அடி அளவு வரை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். போடியில் மட்டும் 37.6 மி.மீ மழை பெய் துள்ளது.