districts

img

கம்பம் தோழர் எஸ்.கனகராஜ் காலமானார்

தேனி, ஜூன் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் ஏரியாக்குழு உறுப்பினரும்  ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி மாவட்ட தலைவர்களில் ஒரு வருமான தோழர் எஸ் .கனக ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். சிஐடியு கம்பம் பகுதி தலை வராகவும் திறம்பட செயல்பட்ட  கனகராஜ் தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைப்ப தில் அரும்பணியாற்றினார் .தமுஎகச அமைப்பில் கிளை  நிர்வாகியாகவும் ,நீண்ட காலம் தீக்கதிர் நாளிதழின் முகவ ராக இருந்து கம்பம் பகுதியில் முறையாக விநியோகம் செய்து பாராட்டை பெற்றவர் .மெட்டு அமைத்து பாடல் பாடுவது, பறை இசை போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட வர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை கம்பத்தில் நடைபெற்றது .கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் .வெங்கடேசன் ,சி.முருகன் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட தலைவர் டி.கே.சீனிவாசன் ,செயலாளர் இ.தர்மர்,  விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,மாவட்ட செயலா ளர் டி.கண்ணன் ,சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஜெய பாண்டி ,மாவட்ட பொருளாளர் சண்முகம் ,விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.வேலவன் ,மாவட்ட செயலாளர் எல்.ஆர்,சங்கரசுப்பு ,தமுஎகச மாவட்ட  தலைவர்கள் தமிழ்மணி ,அ.உமர் பாரூக்,சுருளிப்பட்டி சிவாஜி, மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர் வேல்  மற்றும்  ஏரியாக்குழு உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்தி னர். ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்  தில் தலைவர்கள் உரையாற்றினர். திமுக சார்பில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம்  என்.ராமகிருஷ்ணன் ,நகர் செயலாளர்கள் வீரபாண்டி யன்,செல்வகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.