districts

img

மீண்டும் பணி கோரி காமராசர் பல்கலை. தொகுப்பூதிய பணியாளர்கள் உண்ணாவிரதம்

மதுரை, ஜூன் 14- மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் தொகுப்பூதிய பணியாளர் களாக பணியாற்றிய ஓட்டுநர், கணினி மென்பொருள், பராமரிப்பாளர், இள நிலை உதவியாளர், தோட்டம் பராம ரிப்பவர் உட்பட 136 பேர் திடீரென வாய்  மொழி உத்தரவின்பேரில் கடந்த 8.4.2022 தேதி அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட னர். இதனைக் கண்டித்தும் மீண்டும் பணி வழங்கக்கோரியும் செவ்வாயன்று பல்கலைக்கழக வாயில் முன்பாக 65 வது நாள் போராட்டமாக ஒரு நாள்  அடையாள உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. சங்கத்தின்  மொ.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். இணைச் செயலா ளர் நி.கார்த்திக் வரவேற்றார்.  மதுரை  மாநாகராட்சி துணை மேயர் தி.நாக ராஜ் துவக்கிவைத்துப் பேசினார். கோரிக்கை விளக்கி பணியாளர்கள் சங்க செயலாளர் மு.நாகரோகிணி பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜன் ,சிஐ டியு மாநகர் மாவட்ட நிர்வாகி  எம்.பால சுப்பிரமணியன் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் இரா.தமிழ், பரமசிவம்,  ஏ.டி.செந்தாமரைகண்ணன், வி.பாபு பிரேம்குமார், சந்தியாகு,  எஸ்.பாலமுரு கன் ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.   அரசு ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினார்.  மு.செந்தில் நன்றி கூறினார். இதில் பணி யாளர் சங்க நிர்வாகிகள் சிவானந்தம் ஆனந்த், உட்பட பலர் கலந்து கொண்ட னர்.