சித்திரை திருவிழாவில் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மரு எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆகியோர் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், காவல் துணை ஆணையர் பி.கே.அர்விந்த, துணை மேயர் தி.நாகராஜன், நகரப்பொறியாளர் அரசு, மாமன்ற உறுப்பினர் லோகமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
மதுரை, ஏப்.25- மதுரை மாவட்டத்தில் சித் திரைத் திருவிழாவை முன் னிட்டு மண்டகபடிகளில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங் கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள் ஆகி யவை சுத்தமாகவும் சுகாதா ரமாகவும் பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங் கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறி வுறுத்தினார். மேலும் அவர் கூறுகை யில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பை கள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து , மேற்படி இடங்க ளில் சேரும் கழிவுகளை முறையாக சேகரித்து மாநக ராட்சி தெரிவித்துள்ள இடங் களில் கொண்டு சேர்க்க வேண்டும். கோடை காலத்தை முன்னிட்டு , அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற் பனை இடங்கள் மற்றும் உண வகங்கள் ஆகியவையும் தர மான குடிநீர் செயற்கை சாயங் கள் அற்ற உணவுகளை விற் பனை செய்ய வேண்டும். திருவிழாவை முன்னிட்டு, மண்டகப்படிகளில் இலவச அன்னதானம், மற்றும் பிர சாதம் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இணைய வழியில் ( Online) மூலம் விண்ணப்பம் செய்து மதுரை மாவட்ட உணவு பாது காப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ் ) பெற்று மட்டுமே வழங்க வேண்டும். உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார் களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை கட்செவி ( Whatsapp No.) எண்.9444042322 - ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரி விக்கலாம். மே 5 உள்ளூர் விடுமுறை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 5 ம் தேதி வைகை ஆற்றில் கள்ள ழகர் இறங்குவதை முன் னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக் கப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள், வங்கி கள் மற்றும் தொழிற்சாலை கள், வணிக நிறுவனங்கள் விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.