திருநெல்வேலி, டிச. 2- விவசாயம் குறித்து இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் வகை யில் நெல்லை நகரில் கல்லணை மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாயப் பணியில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் சொக்காட்டான் தோப்புப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நாற்று நடுதல், நெல் பாவுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயி கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் கல்லணை மாணவிகளும் விவசாய பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது மாணவிகள் கூறும் போது, விவசாய பணி களை செய்யும்போதுதான் விவசாயிகள் எவ்வளவு கடினமான பணிகளை செய்து உணவு உற்பத்தி செய்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே பொதுமக்கள் சாப்பிடும் போது உணவுகளை வீணாக்கா மல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து விவசாயத்தை காப்போம் என மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.