திருவில்லிபுத்தூர், டிச.24- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், முன்னாள் மாணவர்கள் சங்கம விழா துணைவேந்தர் ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாணவர் நலத்துறை டீன் முனைவர் எம்.முத்துக்கண்ணன் வர வேற்றார். பதிவாளர் முனை வர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார் பல்கலை துணைவேந்தர் பேசுகையில், முன்னாள் மாணவர்கள் (கல்லூரி முதல் பல்கலை வரை) குழுவில் மாணவர்கள் வருடா வருடம் உறுப்பினராக பதிவு செய்கிறார்கள். இதுவரை 30 ஆயிரம் பேர் பதிவு செய்து உலகெங்கிலும் பரந்து பணி யாற்றுகிறார்கள். கலசலிங் கம் பல்கலைக்கழகம் இந்திய பல்கலைக்கழ கங்கள் வரிசையில் 50-ஆவது இடத்தில் ஒன்றிய அரசு மனித வளத்துறை அமைச்சகத் தின் சார்பில் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த வருடம் முதல் இணையதள படிப்புத் துறைகள் (ஆன்லைன்), திறந்தவெளி கல்விப்படிப்பு துறை (ஓப்பன் டிஸ்டன்ஸ்) நடத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்று ஆரம் பிக்கப்பட்டுள்ளது. அதற் கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது என்று கூறினார். தொடர்ந்து சிறந்த முன் னாள் மாணவர்களுக்கான விருதுகள்”, பாலாஜி, எஸ். போஸ், கலைவாணி சிங்கா ரம், சிவக்குமார், செந்தில் குமார், விசாலினி ஆகி யோர்களுக்கு துணைவேந் தர் கேடயமும் சான்றிதழ்க ளையும் வழங்கி பாராட்டினர். முன்னாள் மாணவர் சங்க தலைவர் பா. வேலுமணி நன்றி கூறினார்.