districts

கடமலைக்குண்டு: பேருந்துகள் மோதி விபத்தில் 10 பேர் காயம்

கடமலைக்குண்டு, மார்ச் 5- தேனி மாவட்டம், வருசநாடு கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திரு மங்கலத்திற்கு தனியார்பேருந்து புறப்பட்டு சென்றது.   தனியார் பேருந்து கடமலைக்குண்டு கிராமத்திற்கு வந்த போது அதே நேரம்  வெள்ளிமலையில் இருந்து போடிக்கு  செல்லும் அரசு பேருந்து கடமலைக்குண்டு  கிராமத்திற்கு வந்தது.  இரண்டு பேருந்து களும் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரே  நேரத்தில் கடமலைக்குண்டுவில் இருந்து  புறப்பட்டு சென்றது. இரண்டு பேருந்து களும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டு அதிவேகத்தில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடமலைக்குண்டு கிரா மத்தை கடந்து டாணா தோட்டம் பகுதியில்  சென்று கொண்டிருக்கும் போது எதிரே கட மலைக்குண்டு நோக்கி பைக்கில் வந்து கொண்டிருக்கும் பெண் திடீரென சாலை யின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக் மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது சுமார் 10 அடி  இடைவெளியில் பின்னால் வந்து கொண்டி ருந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தனியார் பேருந்தின்  பின்புறமாக மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையின் வலது புறமாக திரும்பியது. அப்போது எதிரே கடமலைக் குண்டு நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு மினி லாரி மீது பேருந்து மோதி நின்றது. இதில் அரசு பேருந்தின்ன் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த  10 பேர் காயமடைந்தனர்.மினி வேன் டிரை வர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி  உயிர் தப்பினார். விபத்து காரணமாக தேனி-வருசநாடு பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம டைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.