districts

img

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருக!

கடமலைக்குண்டு, ஆக.11- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே தேவராஜ்நகர் கிராமம் அமைந் துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட  குழந்தைகள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொம்புகா ரன்புலியூர் கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில் படித்து வருகின்றனர். தினமும் காலை, மாலை 1 கிலோ மீட்டர் தொலைவு குழந்தைகள் நடந்து சிரமப்பட்டு வருவதால் தேவராஜ்நகர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொட ர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டது.  இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு வர வில்லை. இதனால் குழந்தைகள் நாள்தோ றும் 1 கிலோமீட்டர் தூரம் அங்கிருந்து அங் கன்வாடிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவராஜ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டி டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.