இராமநாதபுரம், நவ.11- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு எஸ்இடிசி (SETC) விரைவு பேருந்து சேவையை தொடங்க வேண் டும். இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் பயன்படுத்திவந்த கொரோனா பேரிடர் காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து அரசு பேருந்து களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ் கனி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த கோரிக்கை கடிதம் வருமாறு: இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எனவே அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை பரி சீலித்து, அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமநாதபுரம் நாடா ளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் கொரோனா காலகட்டத் தில் ஊரடங்கை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இயங்க ஆரம் பித்த பேருந்து சேவையில் சில குறிப் பிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இயங்காமலேயே இருப்பதாக தொகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்து சேவைகளையும் மீண்டும் முழுமை யாக இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை தாலுகா காரங்காடு ஊராட்சி பகுதியிலிருந்து திருச்சி வரை இரு மார்க்கமும் மற்றும் மாலை நேரம் காரங்காடு முதல் தேவகோட்டை வரை இரு மார்க்கமும் இயங்கி வந்த பேருந் தினை மீண்டும் இயக்க வேண்டும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், குதக் கோட்டை ஊராட்சி, கொட்டியக்காரன் வலசை சுற்றுவட்டார கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராம நாதபுரம் - பெரியபட்டினம், இராமநாத புரம் - ரெகுநாதபுரம் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.