districts

img

வீரநல்லூர் பேரூராட்சி: சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து க.கனகராஜ் பிரச்சாரம்

திருநெல்வேலி, பிப் .14- நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் வீரநல்லூர் பேரூராட்சி 1 மற்றும் 2 வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் சந்திரா கீதா ஆகியோருக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வீரவநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,பி. கற்பகம் மற்றும் சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் பாலு,  திமுக ,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.