districts

img

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவியை நியமித்தமைக்கு பாஜக வெட்கப்பட வேண்டும்

தேனி, ஏப்.12- தமிழ்நாட்டின் ஆளுநராக  ஆர்.என்.ரவியை நியமித்தமைக்கு பாரதிய ஜனதா கட்சி வெட்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி சாடிப் பேசினார். ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்ற முழக்கத்  துடன் தேனியில் திமுக தோழமைக்  கட்சிகளின் சார்பில் ஏப்ரல் 12 புத னன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமை வகித்தார் . திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, காங்கிரஸ் கட்சி தேனி மாவட்ட தலைவர் எம்பி.முரு கேசன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மூத்த தலைவர் எஸ்.திருமலைக்    கொழுந்து ,மதிமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே. ராம கிருஷ்ணன் ,விடுதலை சிறுத்தை கள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்  வாணன் , திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் உள்ளிட்டோர் உரையாற்றினர் . திமுக நகர் செயலாளர் என்.சி.நாராயணபாண்டி ,ஒன்றியக் குழு தலைவர் சக்கரவர்த்தி ,காங்கி ரஸ் கட்சியை சேர்ந்த தேனி முன்னாள் நகர்மன்ற தலைவர் முனி யாண்டி  ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே. பெருமாள் ,மார்க்சிஸ்ட் கட்சி  மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.முருகன் ,எம்.ராமச்சந்திரன் .இ.தர்மர் உள்ளிட்ட தோழமைக்கட்சித் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

கே.பாலபாரதி பேச்சு 

கூட்டத்தில் கே.பாலபாரதி பேசியதாவது: ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இரண்டு முறை தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்திய வரலாற்றில் இது முதல் முறை யாகும் .சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு கையெழுத்து போட்டு விட்டு ,உரையில் பெரியார் ,அண்ணா ,கலைஞர் போன்ற தலை வர்கள்  பெயரையும் , .ஜனநாயகம் ,மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகளை உச்சரிக்காமல் பேசினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி யும்,சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் வாசித்ததாக தமிழ்நாடு  முதல்வர், ஆளுநர் முன்னிலை யில்  தீர்மானம் கொண்டுவந்தார் .தேசிய கீதத்தை புறக்கணித்து ஆளுநர் ஓட்டம் பிடித்தார். சில நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு பெற்ற  மாண வர்களுக்கு வகுப்பு எடுப்பதாக  கூறி, அவர்களிடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளிடம் பணம் பெற்று  போராடியதாக தெரிவித்ததோடு ,சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாவை நாகரிகம் கருதி நிறுத்தி வைத்திருப்பதாகவும் ,அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் .முதல்வர் சட்டமன்ற விதியை திருத்தி, கண்டன தீர்மா னம் கொண்டு வந்தார். சில மணி நேரத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் கையொப்பமிட்டார் ஆளுநர். அவசர சட்டத்தில் கை யெழுத்து போட்ட ஆளுநர் , மசோ தாவில் கையெழுத்து போட இவ்வளவுகாலம் மறுத்தது ஏன்? தமிழ்நாட்டு மக்களின் வியர்வை பணத்தில் வாழ்ந்து வருகிற ஆளு நர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதி ராக செயல்பட்டு வருகிறார். அவர்  உடனடியாக ராஜினாமா செய்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.