திண்டுக்கல். ஏப்.16- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பாக இப்தார் விருந்து திண்டுக்கல் கே.ஏ.எம்.நகர், ஹவ்வா பள்ளிவாசலில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் செய லாளர் முகமது நசுருதீன் தலைமை வகித் தார். குடியிருப்போர் நலச்சங்க செயலா ளர் ஷாஜகான், திமுக மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்போர் நலச்சங்க பொருளா ளர் கலிபுல்லா வரவேற்றார். முன்னாள் திண்டுக்கல் எம்எல்ஏ கே.பாலபாரதி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சாம்சன் ஆரோக்கியதாஸ், அருட்தந்தை அருள்யீரூபேஷ், சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், கே.எம்.ஏ. பிரணவ்ஜி இளஞ்சித்தர் பீடம் நிறுவனர் டாக்டர் வி.இளங்கோவன், , திமுக ஒன்றி யச்செயலாளர் நெடுஞ்செழியன், திமுக ஒன்றியக்கவுனசிலர் வெங்கடேசன், மதிமுக ஒன்றியக்கவுன்சிலர் மோகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தா. அஜாய், ஒன்றியச்செயலாளர் சரத்குமார், விழா குழுவினர் ஹபீப்முகமது, முகமது அனிபா, அகமது உசேன் மற்றும் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குடியிருப்போர் நலச்சங்க துணைத்தலைவர் செல்லமுத்து நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு தலைவர்கள், ஹவ்வா பள்ளி வாசல் ஜமாத்தார்கள். கே.ஏ. எம்.நகர். பாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கலந்து கொண்டனர். (நநி)