districts

img

சிபிஎம், திமுக வேட்பாளர்களை ஆதரித்து கே.பாலபாரதி, என்.பாண்டி வாக்குச்சேகரிப்பு

திண்டுக்கல், பிப்.13- திண்டுக்கல் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். 2-ஆவது வார்டில் போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர் கே.எஸ்.கணேசன், 3-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திராணி, 4-ஆவது வார்டு திமுக வேட்பாளர் நாக ராஜன், 5-ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுவாதி, 6-ஆவது வார்டு திமுக வேட்பாளர் சரண்யா ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது. மருதாணிக்குளம், பிள்ளை யார்பாளையம் உள்ளிட்ட பல பகு திகளில் வீடு வீடாகச் சென்று பால பாரதி, என்.பாண்டி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் நடராஜன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சந்தி ரசேகரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆசாத், தா. அஜாய்கோஷ், கே.ஆர்.பாலாஜி, முகேஷ், நகரச் செயலா ளர் ஏ.அரபுமுகமது, மணி, சிபிஎம் ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாய கம், ஒன்றியக்குழு உறுப்பினர் கள், ராஜாமணி, பவுல்ராஜ், நிரு பன்பாசு உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். சனியன்று 35-ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்  பாளர் ஜோதிபாசு, 48-ஆவது வார்டில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் காயத்ரி, 34-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அழகர்சாமி, 33-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜான்பீட்டர், 32-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக நகரச்செயலாளரும் வேட்பாளருமான ராஜப்பா ஆகி யோரை ஆதரித்து கே.பால பாரதி வாக்கு சேகரித்தார்.  சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், நகரச்செயலாளர் அரபுமுக மது, அடியனூத்து ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றியக்கவுன்சிலர் செல்வநாய கம், முன்னாள் செட்டிநாயக் கன்பட்டி ஊராட்சித்தலைவர் செல்வகணேசன், ஒன்றியக்குழு,  நகர்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.