தேவகோட்டை, மார்ச் 19- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நடைபெற்ற முகாமில் மாணவர்களு டன் நீதிபதி கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு வின் தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி முரு கன் மாணவர்களிடம் கலந்துரையாடினார். 2020-ஆம் ஆண்டு இணைய வழியில் நடை பெற்ற சட்டப் பணிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற மாண வர்களில் சிறப்பு பரிசுக்கு தேர்வாகிய மாணவர்கள் கீர்த்தியா, ஜோயல் ஆகியோருக்கு பரிசுகளை நீதிபதி வழங்கி பாராட்டினார். தேவகோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் அலு வலர் வெற்றி செல்வன் ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.