districts

மதுரை முக்கிய செய்திகள்

பெரியகுளம் அருகே நகை,  இரு சக்கர வாகனம் திருட்டு

தேனி, ஜுன் 19- பெரியகுளம் தேவதானப்பட்டி வைகைஅணைசாலை யைச் சேர்ந்தவர் விஜிமோன்(35). இவர் கடந்த 17-ஆம் தேதி  வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். காலை யில் எழுந்தபோது மாடிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டி ருந்தது. அறைக்குள் சென்றுபார்த்த போது இரண்டு மொபைல்கள், பீரோவில் இருந்த 2.5பவுன் நகை, மற்றும்  வெளியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனம் ஆகி யவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த  மதிப்பு ரூ.ஒருலட்சத்து 5 ஆயிரம் ஆகும். புகாரின்பேரில் தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

இரட்டைக்கொலை வழக்கில் தலைமறைவானவர் சிக்கினார்

தேனி, ஜூன் 19- போடியில் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறை யிலிருந்து ஜாமீனில் வெளி வந்து கடந்த ஐந்தாண்டு களாக தலைமறைவாக இருந்தவரை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். போடி, சுந்தரராஜபுரம், ஒண்டிவீரன் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் சுருளிராஜ்(49). இவர், தனது மனைவி யின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு  மனைவி மற்றும் மாமனாரை குத்திக் கொலை செய்ததாக  போடி தாலுகா காவல் துறையினர் கைது செய்தனர். இந்த  வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறையிலிருந்து  ஜாமீனில் வெளிவந்த சுருளிராஜ் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தலைமறை வாக இருந்து வந்தார். அவரை காவல் சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமை யிலான தனிப்படை தேடி வந்தது. இந்த நிலையில், கோயம்புத்தூர் அருகே வெள்ளளூரில் வாடகை வீட்டில்  தங்கியிருந்து, கார் ஓட்டுநராக வேலை செய்து வந்த சுருளி ராஜை தனிப் படை காவல்துறையினர் கைது செய்து, தேனி  மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்த னர்.

சக்கம்பட்டியில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தேனி, ஜூன் 19- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்  றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் மாவட்டம் தோறும் துறை வாரியாக, பல்வேறு நலத்திட்ட முகாம் களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.  அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இலவச  பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியகுளம் வட்டம், சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் ஜூன் 24-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு முகாம்  நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் தொற்றா நோய் களுக்கான இரத்த அழுத்தப் பரிசோதனை, சிறுநீர் பரி சோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும்  கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை கள் உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு இரத்தப் பரி சோதனையும் இலவசமாக செய்து கொள்ளலாம்.  பொது மருத்துவம், எக்கோ மற்றும் இசிஜி, பொது அறுவை சிகிச்சை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மக ளிர் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை மற்றும்  பல் மருத்துவர், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம்  மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோ சனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ளும், மருத்துவ மேல் கிசிக்சை தேவைப்படும் நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இப்  பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

முதலைக்குளமா? கஸ்பா முதலைக்குளமா?

மதுரை ஆட்சியர் முடிவெடுக்க அறிவுறுத்தல்

மதுரை, ஜூன் 19-  மதுரை மாவட்டம் உசி லம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “எங்கள் ஊரின் உண்மையான பெயர் முத லைக்குளம். ஆனால், எங் கள் கிராமத்தில் தற்போது கஸ்பா முதலைக்குளம் என  மாற்றப்பட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே  வீட்டில் மகளுக்கு முத லைக்குளம் என்றும் மக னுக்கு கஸ்பா முதலைக்  குளம் என்றும் ஆதார் கார் டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து ஆவணங்களி லும் முதலைக்குளம் என மாற்றம் செய்யக்கோரி உசி லம்பட்டி வட்டாட்சியருக்கு மனு அளித்தோம். அதை அவர் நிராகரித்து விட்டார். எனவே வட்டாட்சியர் பிறப்  பித்த உத்தரவை ரத்து செய்து, அனைத்து ஆவ ணங்களிலும் முதலைக் களம் என பதிவு செய்ய உத்த ரவிட வேண்டும்” எனக் கூறி யிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்  பாக திங்களன்று விசா ரணை வந்தது. அப்போது உசிலம்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருவாய் ஆவணங்கள் அனைத்திலும் முத லைக்குளம் என உள்ளது எனக்கூறி ஆவணங்களை தாக்கல் செய்து விளக்க மளித்தனர். இதைப் பதிவு செய்த நீதிபதிகள் ஒரு ஊருக்கு பல பெயர் உள்ளதால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.  இது குறித்து ஆட்சியர் உரிய முடிவு எடுத்து அறி விக்க வேண்டும் என உத்த ரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

10,12-ஆம் வகுப்பில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

சிவகங்கை, ஜூன் 19- மானாமதுரை செர்டு தொண்டு நிறுவனத்தின் திரு வள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழு 21-ஆண்டு விழா  நடைபெற்றது. இதில் 10,12-ஆம் வகுப்புகளில் சாதனை  படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டத் தெரிவிக்கப்பட்டது.  நிகழ்விற்கு தேவதாஸ் தலைமை வகித்தார். செயலா ளர் நாகலிங்கம், அடைக்கலம் முன்னிலை வகித்தனர். செர்டு இயக்குநர் பாண்டி, முதுநிலை கணக்கு அதிகாரி  செல்வராஜ், மண்பாண்ட கூட்டுறவு சங்கத் தலைவர் லெட்சு மணண், 12-ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நதியா,  சிவகங்கை தொல் நடைக்குழு ஆசிரியர் பயிற்றுநர் காளி ராஜா, தலைமை ஆசிரியர் (ஒய்வு) மாரியப்பன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். 12-ஆம் வகுப்பு மாண வர்கள் லேகாஸ்ரீ, அரிச்செல்வம், அபர்னா, 10-ஆம்  வகுப்பு மாணவர்கள் அனுசியா, மதுபாலா, கரன் ஆகி யோருக்கு பரிசுள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

உயிர்பலிக்குப் பின் காவல்துறை நடவடிக்கை தினம்தோறும் பதற்றத்துடன் சாலையைக் கடக்கும் மக்கள்

மதுரை, ஜூன் 18- மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (20). இவர் ஞாயிறன்று நண்பர் ராதாகிருஷ்ணனுடன் இருசக்கர வாகனத்தில் ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பேருந்து  மோதியதில் ரோகன் சம்பவ இடத்திலேயே  பலியானார். காயமடைந்த ராதா கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  திங்களன்று காலை போக்குவரத்துக் காவல்துறையினர் விபத்து நடந்த சாலை யின் நடுவே தடுப்புகள் அமைத்தனர். மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் வாக னங்கள் மெதுவாகச் செல்வதற்கும் நட வடிக்கை எடுத்தனர். விபத்தில் சிக்கி வாலி பர் பலியான சூழலில் போக்குவரத்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரைக்  கல்லூரி மற்றும் முக்கிய நிறுவனங்கள், கோவில்கள் உள்ளன. இந்தச் சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். ஆனால் சாலை யின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படாத தால் மக்கள் பதற்றத்துடன் கடக்க வேண்டி யுள்ளது.  தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் உள்ள சாலை, ஆண்டாள் புரம் பகுதி, பழங்காநத்தம் சந்திப்பு போன்ற பகுதி களில் அதிவேகமாக வரும் வாகனங்க ளுக்கு இடையில்மக்கள் உயிரைப் பண யம் வைத்து சாலையைக் கடக்க வேண்டி யுள்ளது.  மேற்கண்ட பகுதிகளில் விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் வேகத்தடை மற்றும் தடுப்புகளை அமைக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பசுமலையில் உள்ள ஒரு  பள்ளி முன்பும் தடுப்புகள் அமைத்து வாகன  வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.