districts

img

‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு’ விழிப்புணர்வு பெருநடைபயணம்

மதுரை, ஜூலை 29- தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்து ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு’ தொடர்பான விழிப்புணர்வு பெருநடைபயண நிகழ்ச்சி  ஜூலை 29 அன்று மதுரையில் நடைபெற் றது. மதுரை உலக தமிழ்ச்சங்கம் வளா கத்திலிருந்து நடைபயணத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி, மாவட்ட ஆட்சித்  தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மதுரை மாவட்ட  சமூக நல அலுவலர் பரமேஸ்வரி வரவேற் றார். மாநில மகளிர் ஆணைய தலைவர் பேசுகையில், பெண்களுக்கு எதிரான வன்  கொடுமைகளைத் தடுப்பதற்கான முதன் மையான முயற்சியே இந்த நடைபயணம் என்று முதன்மை உரையாற்றினார். நீதிபதி  ஆர்.என். மஞ்சுளா கூறுகையில், பெண்களி டையே காணப்படும் அறியாமை ஒழிக்கப்  பட்டு தயக்கம் தகர்க்கப்பட்டு சமூகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.  ஆட்சியர் சங்கீதா, பெண்கள் தங்க ளுக்கு விருப்பமில்லாத எந்த செயலுக்கும்  உடன்படக்கூடாது என்பதை உறுதிப் படுத்தும் வகையில் அச்சமில்லாமல் முழங்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும்  வன்முறைகளைத் தெரிவிக்க ஹெல்ப்  லைன் 181-ஐ பயன்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி பேசுகை யில், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைச் பொறுத்துக் கொள்ளாது, எதிர்த்து பெண்கள் மட்டுமின்றி ஆண்களும்  குரல் கொடுக்க வேண்டும் என ஊக்க  உரையாற்றினார். பாலியல் துன்புறுத்தல்  தண்டனைக்குரிய குற்றம் என்பதை அறி வுறுத்தும் விதமாக புகைப்படக்கலைஞர் வெங்கட் ராம் வடிவமைத்த விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டது.  மதுரையில் உள்ள டோக் பெருமாட்டி  கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தியாக ராஜர் கல்லூரி, யாதவர் மகளிர் கல்லூரி, மீனாட்சி கல்லூரி, பாத்திமா கல்லூரி, என்.எம்.ஆர். கல்லூரி போன்ற பல்வேறு கல்லூரி மாணவிகளும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகளும் என மொத்  தம் 1000 மாணவிகள் ‘எழுந்து நில் துணிந்து  சொல்’ எனும் வலிமையான சிந்தனையை முன்னெடுத்து கலந்து கொண்டனர்.  பெருநடைபயணத்தில் வெற்றி பெற்ற  வீராங்கனைகளுக்கு கல்வி குருப் ஆப்  ஸ்கூல் நிறுவனத்தால் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. இளைய தலைமுறை யினருக்கு பெண்களுக்கு எதிரான வன்  முறை குறித்த விழிப்புணர்வுச் சிந்தனை யை ஊட்டும் வகையில் இந்நிகழ்வில் கை யேடு வெளியிடப்பட்டது.  ஒருங்நிணைந்த சேவை மையத்தின் அலுவலர் திருமதி டயானா புனிதவதி நன்றி கூறினார்.