districts

img

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகிறது திருவில்லிபுத்தூரில் பயன்பாட்டிற்கு வராத நகர்ப்புற நல வாழ்வு மையம்

திருவில்லிபுத்தூர்,  ஜூன் 1-

     திருவில்லிபுத்தூர் நகராட்சி 22-வது வார்டு இடையபொட்டல் தெரு வில் பொதுமக்களின் வச திக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்ப தற்கு 2021 – 2022 நிதியாண் டிற்கான ஒன்றிய  நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதற்காக இடைய பொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய் யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப் பட்டது.  

   இந்நிலையில் கட்டு மான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது.  மக்களின் சுகாதா ரத்தை பேணுவதற்காக தொடங்கப்பட்ட நல வாழ்வு மையம், .சமுக விரோதிகள் குடிகாரர்களின் இடமாக மாறியுள்ளது. மேலும் கட்டிடம் திறந்த நிலையில் உள்ளது. கதவுகள்  சேத மடைந்துள்ளன.

   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குடி யிருப்புகளுக்கு அருகே இருக்க வேண்டும் என்ப தற்காகத்தான் நல வாழ்வு மையம் என்கிற திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு சுகாதார வளாகம் அருகே ஒதுக்குப் புறமான இடத்தில் அமைந்ததால், நல வாழ்வு  மையம் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. பணிகள் முடிந்த நிலையில் இன்னும் திறப்பு விழா கூட வைக்க வில்லை. நகராட்சி நிர்வாகம் சுகாதாரத்துறையிடம் கட்டிடத்தை ஒப்படைக்கா ததால், மருத்துவர்கள் உட்பட எந்த பணியாளர்க ளும் வருவதில்லை’ என்ற னர்.

    இதுகுறித்து நகர பொறியாளரிடம் கேட்ட தற்கு பணிகள் முடிந்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஒப்படைத்து விட்டோம் என்று கூறுகிறார். திருவில்லிபுத்தூர் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிந்தியா,வட்டார சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கூறுகையில், இன்று வரை நலவாழ்வு மையக் கட்டிடம் நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை. காலையில் நான்கு மணி நேரம் மாலையில் நான்கு மணி நேரம் நலவாழ் மையம் செயல்படும். ஒரு  மருத்துவர் ,ஒரு செவிலி யர், ஒரு மருந்தாளர் ,உதவி யாளர் உள்ளிட்டோர் நிய மிக்கப்பட்டுள்ளனர், நக ராட்சி நிர்வாகம் முறையாக ஒப்படைக்கும் பட்சத்தில் திறப்பு விழா நடத்தி நல வாழ்வு மையம் செயல்பட தொடங்கும் அதுவரை எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினர்.