தீக்கதிர் சந்தா தொகை ரூ.7.35 லட்சம் வழங்கிய சிபிஎம் மதுரை மாநகர்
மதுரை, ஜூலை 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று செல்லூர் சோலை மஹா லில் நடைபெற்ற சிறப்பு பேரவையில் முதல் கட்டமாக 577 சந்தாக்களுக்கான தொகை ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 850 ரூபாயை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. மல்லிகா, எஸ். வேல்தேவா ஆகியோர் தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, மதுரை பதிப்பு மேலாளர் ஜோ . ராஜ்மோகன் ஆகியோரிடம் வழங்கி னர்.
இதில் 5 ஆண்டு சந்தா ஒன்று, ஆண்டு சந்தா 215, 6 மாதம் சந்தா 244, மூன்று மாதம் சந்தா 50, மாதம் 67 சந்தாக்கள் என கட்சியின் பகுதிக்குழுக் கள் சார்பில் சந்தாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினரு மான டி. குமரவேல் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் சிறப்புரையாற்றினார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
\தேனியில் 387 சந்தா தொகை ரூ 5.32 லட்சம் அளிப்பு
தேனி.ஜூலை.23- தேனியில் தீக்கதிர் 387 சந்தாக்களுக் கான தொகை 5 லட்சத்து 32 ஆயிரத்து 800 ரூபாய் தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் வழங்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா தேனியில் திங்க ளன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றி னர்.
நிறைவாக தேனி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட ஓராண்டு 167, ஆறுமாதம் 189, மாதம் 31 என மொத்தம் 387 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ.5,32,800 -ஐ மாநில செயற்குழு உறுப் பினரும் தீக்கதிர் சிறப்பாசிரியருமான மதுக்கூர் இராமலிங்கத்திடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடே சன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
கரூரில் 140 சந்தா தொகை ரூ. 2.28 லட்சம் அளிப்பு
கரூர், ஜூலை 23 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் விளக்கப் பேரவை மற்றும் தீக்கதிர் சந்தா அளிப்பு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், தீக்கதிர் நாளிதழ் பொதுமேலாளர் என்.பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர் 140 தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா தொகை ரூபாய் 2 லட்சத்து 28 ஆயிரத்து 700-ஐ பெற்றுக்கொண்டு ஒன்றிய, மாநிலக் குழு முடிவுகளை விளக்கி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூரில் 93 சந்தா தொகை ரூ.1.7 லட்சம் வழங்கல்
அரியலூர், ஜூலை 23 - அரியலூர் மாவட்டம் முழுவதும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் சிறப்பு பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாநிலக் குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் பொறுப்பாளருமான ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.கந்தசாமி, டி.அம்பிகா, ஆண்டிமடம் வட்டச் செயலாளர் வி.பரமசிவம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், செந்துறை ஒன்றியச் செயலாளர் கு.அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டத்தில் தீக்கதிர் ஆண்டு சந்தா 20, அரையாண்டு சந்தா 15, புதுச்சாவடியில் தினசரி சந்தா 10, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு தினசரி சந்தா 15, தா.பழூரில் ஆண்டு சந்தா 8, அரையாண்டு சந்தா 8, செந்துறையில் ஆண்டு சந்தா 4, அரையாண்டு சந்தா 8, அரியலூரில் ஆண்டு சந்தா 2, அரையாண்டு சந்தா 3 என மொத்தம் 93 சந்தாக்களுக்கான தொகை ரூபாய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 50 மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த சந்தா தொகை திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபாலிடம் வழங்கப்பட்டது.