மதுரை, மார்ச் 6- மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரி செயலா ளர், தாளாளர் சுந்தர் தொடங்கி வைத்தார். பட்ட மளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது: மாணவர்கள் கல்லூரி யில் கற்ற ஒழுக்கத்தை வரக் கூடிய காலங்களில் வெளிப் படுத்தவும், பட்டம் பெற்ற பின் வரக்கூடிய தம் வாழ்க் கையை மிகவும் அழகாகப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நல்லவிதத்தில் சிந்தித்து பயன்படுத்தினால் நம் நாடு மேலும் வளர்ச்சி அடையும். புதுவிதமான தொழில்நுட் பங்களைக் கற்றுக்கொண்டு முயற்சி செய்தால் இஸ்ரோ வில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்திய அள வில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவுத்திற மையைக் கண்டறிந்து அதற் கென ஆராய்ச்சியை ஊக்கு விக்க இஸ்ரோ வழிகாட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 962 பேருக்கு பட்டம் விழாவில் மதுரை மக்க ளவை உறுப்பினரும், சாகித்ய அகாதெமி விருது பெற்ற வருமான சு.வெங்கடேசன், இஸ்ரோ சிவன் ஆகியோர் இளநிலை மற்றும் முது நிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் 560, மாணவி கள் 402 என மொத்தம் 962 பேருக்கு பட்டம் வழங்கினர். விழாவிற்கு வந்தவர் களை கல்லூரி முதல்வர் (பொ) சுரேஷ்குமார் வர வேற்றார். பட்டமளிப்பு விழா வில் கல்லூரியின் துணைத் தலைவர் பொன்னுச்சாமி, இணைச்செயலாளர் ஆனந்த குமார், கரிக்கோல்ராஜ், பொருளாளர் பாண்டியன், துணை முதல்வர் செல்வ மலர், சுயநிதிப்பிரிவு இயக்கு நர் ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா பொறுப்பாளர் செந் தில்குமார் மற்றும் துணைப் பொறுப்பாளர் முத்துராயர் ஆகியோர் விழா ஏற்பாடு களை செய்திருந்தனர்.