districts

img

செலவு குறைந்த ராக்கெட்: ஜூலை 28 விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

சென்னை, ஜூலை 10- சிறிய வகையில் மைக்ரோ மற்  றும் நானோ வகை செயற்கை கோள்  கள் தயாரித்து இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்பு பி.எஸ்.எல்.வி. ரக ராக் கெட்டுகள் பொருத்தி விண்ணில் ஏவி வந்தது.  இதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுவதால் சிறிய வகை செயற்கை கோள்களை விண்ணில்  செலுத்துவதற்கான, ‘சிறிய செயற்  கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்’ (எஸ்.எஸ்.எல்.வி.) ரக  ராக்கெட்டுகள் இஸ்ரோ தயாரித் தது. இவை செலவு குறைந்த ராக்  கெட்டாகும்.  தொழில்துறை உற்பத்திக்காக இந்த வகை ராக்கெட்டுகள் அதி கம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறிய வகை செயற்கை கோள்கள் தேவைக்கு ஏற்ப தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.  இது வளர்ந்து வரும் தேவை யை பூர்த்தி செய்ய உதவுகிறது. தனித்துவமான இந்த வகை  ராக்கெட்டுகள் 3 நிலை கட்டமைப்பு களை கொண்டிருக்கும். உந்து விசைக்கான 3 நிலைகளிலும் திட எரி பொருள் பயன்படுத்தப்படுகிறது. இவை வேகத்தை பயன்படுத்தி துல்லியமான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் சக்தி படைத்தது. இந்த வகையில் முதல் எஸ்.எஸ்.எல்.வி.டி.-1 ராக்கெட்,  ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட் டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி  விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் இந்த பணி அதன் நோக்கத்தை அடையவில்லை. எனினும் இஸ்ரோ இந்த ராக்கெட்டில் இருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக் கொண்டு, அடுத்து வந்த  ராக்கெட்டில் அவற்றை பயன் படுத்தவும் திட்டமிட்டது.  தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி.  டி-2 ராக்கெட் வகையில் மேம்  படுத்தப்பட்ட ராக்கெட் வடிவ மைக்கப்பட்டது. இதை கடந்த  பிப்ரவரி 10 ஆம் தேதி வெற்றிகர மாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதி சாட்-2 ஆகிய செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக பூமியில் இருந்து 450 கி.மீ. தூரத்  தில் விண்ணில் நிலைநிறுத்தப் பட்டது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3  ராக்கெட்டை, சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் தொழில்துறையினருக்கு செலவு குறைந்த ராக்கெட்டுக்களுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது என்று  இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி யுள்ளனர்.