districts

img

ஏராளமான மக்களை நிரந்தர ஊனமுற்றவர்களாக மாற்றிய இஸ்ரேல்

மதுரை, ஆக.7 -  பாலஸ்தீன மக்கள் மற்றும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்க வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் செவ்வாயன்று மதுரை  மகபூப்பாளையம் ஜின்னா திடலில் திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. 

கருத்தரங்கிற்கு தேசிய ஊனமுற்றோர் மேடை அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்புராஜன் தலைமை வகித்தார். இதில் தேசிய  ஊனமுற்றோர் மேடைக்கான அகில இந்திய  பொதுச் செயலாளர் டி.முரளிதரன் பேசியதா வது:

காசா மாநகரம் என்பது 355 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மதுரை  மாநகரை விட மூன்று மடங்கு பெரிய நகரம்.  அப்படிப்பட்ட நகரத்திலே 2023 அக்டோபர் 7  ஆம் தேதி முதல் மிக கொடூரமான தாக்குதலை  இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டிருக்கின் றது. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது நிரந்தரமாக முட மாக்கியுள்ளார்கள். இது போன்ற ஒரு பேர ழிவை இஸ்ரேல் ராணுவம் ஏற்படுத்தியுள்ளது. 

நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய இஸ்ரேல்

பள்ளிக்கூடங்கள், சுகாதார மையங்கள், மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்துள்ளார்கள். அங்கு உள்ள  குடும்பங்கள் ஒருமுறை இருமுறை அல்ல, பத்துக்கும் மேற்பட்ட முறை இடம் பெயர்ந்து உள்ளார்கள். ஏராளமான மக்கள் நிரந்தர ஊன முற்றவர்களாக கைகளை இழந்து, கால்களை  இழந்து, உறவுகளையும் இழந்து நிற்கிறார்கள். 

மிகப்பெரும் அநீதி அங்கு நடந்து கொண்டி ருக்கின்றது. இஸ்ரேலின் கொடூரமான தாக்கு தலுக்கு எதிராக அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களு டைய பெரும் ஆதரவை தெரிவிக்கின்றனர். 

காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு  கூட மிகப்பெரும் தடைகளை ஏற்படுத்தி உள் ளார்கள். மிகப்பெரும் இயற்கை பேரிடர் களுக்கு மத்தியிலும் காசா மக்கள் இஸ் ரேலை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். 

மனவளர்ச்சி குன்றியவர்கள் சுட்டுக்கொலை

ஒரு பத்து வயது மனவளர்ச்சி குன்றிய சிறு வனை காசா பகுதியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அவர்கள் குடும்பத்தினர் கண் முன்னேயே இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்  கொன்றார்கள். அதேபோல் 39 வயதான சலீம் என்ற இளைஞர் மூளை வளர்ச்சி குன்றிய வர். அவரிடம் இஸ்ரேல் ராணுவத்தினர் ஒரு  உத்தரவிடுகிறார்கள், அது அவருக்கு புரிய வில்லை. உடனடியாக, இஸ்ரேல் ராணுவத்தி னர் சுட்டுக் கொல்கிறார்கள். அதேபோல் 24  வயது மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட இளை ஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உதவி செய்யும் அமெரிக்கா

அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இஸ்ரே லுக்கு உதவி செய்கிறது. பாலஸ்தீனத்தில் மக்களை கொன்று குவிக்கும் இந்த சர்வாதிகார  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சென்ற போது அங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கிறார்கள். அப்படி என்றால் பாலஸ்தீன போருக்கு ஆதர வாக அமெரிக்கா இருக்கிறது என்பது தானே உண்மை.

இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை அமெ ரிக்கா செய்து வருகிறது. அவைகளைக் கொண்டுதான் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல்  தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் அமெ ரிக்கா  ஆயுதங்களை கொடுத்து கொண்டு, பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள போரை முடிவுக்கு கொண்டு  வருவதாக, சமாதானம் பேசுவதாக பொய் சொல்லி வருகிறது. 

இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறிய மோடி அரசு

இப்படிப்பட்ட நிலையிலே இந்தியா கடந்த  காலங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வந்தது. ஆனால் மோடி அரசு இன்றைக்கு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப் பாட்டை எடுத்துள்ளது. மேலும் ராணுவ தள வாடங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கி வரு கிறது. மோடியின் நண்பர் கௌதம் அதானி  இஸ்ரேலில் இருக்கக்கூடிய ஆயுத நிறுவனங் களுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துள்ளார்.  அதன் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு ட்ரோன் என்று சொல்லக் கூடிய ஆளில்லாத  விமானங்களை உற்பத்தி செய்து வழங்கி யுள்ளார். அதனை வைத்துக்கொண்டு இஸ்ரேல்  ராணுவம் குண்டுகளையும், ஏவுகணைகளை யும் பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதிகளில் வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது  எவ்வளவு பெரிய வெட்கக்கேடான விஷயம். 

அதுமட்டுமல்ல, இஸ்ரேலுக்கு ஆதரவாக வும் பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இந்திய தொழிலாளிகளை ஒன்றிய மோடி அனுப்பி யுள்ளது. இதனால் இந்திய தொழிலாளர்கள் அங்கு படுகொலை செய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இந்திய தொழிலாளர்களை மோடி அரசு தள்ளி  உள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட முயன்றால்,  தீவிரவாதிகள் என்று சொல்லி ‘உபா’ சட்டம் போன்றவைகளை ஏவி கைது செய்கிறது. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் கூட  மாற்றுத்திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மிக பிரம்மாண்டமான போராட்டங் களை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடத்தி வருகின்றன.

தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத் தின் தலைவர் நெல்சன் மண்டேலா ஒருமுறை  சொன்னார், “பாலஸ்தீனம் விடுதலை அடை யாத வரை உலகில் எந்த நாடும் விடுதலை அடைந்ததாக அர்த்தமில்லை”. எனவேதான் இன்றைக்கு உலகம் முழுவதும் பாலஸ்தீன விடுதலைக்கான குரல் வலுத்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவமே, பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! என்ற குரலை உரைத்து முழங்குவோம் என்று முழக்கமிட்டார்.

அவரது ஆங்கில உரையினை தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழி  பெயர்த்தார்.

கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க மாநகர் மாவட்டத் தலைவர் பி.வீரமணி, புறநகர் மாவட்டத் தலைவர் கே.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செய லாளர் டி. குமரவேல் எம்.சி. வரவேற்று பேசி னார். மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த் ஒருமைப்பாடு கையெழுத்தை துவக்கி  வைத்தார்.

மாநிலத் தலைவர் தோ.வில்சன், துணை மேயர் தி.நாகராஜன், மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டச் செயலா ளர்கள் மாநகர் ஆ.பாலமுருகன், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.முருகன் உள்ளிட் டோர் பேசினர். 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு  தலைவர் கே.அலாவுதீன், த.மு.மு.க தெற்கு  மாவட்டத் தலைவர் எஸ்.ஷேக் இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமைப்பின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா, மாநகர் மாவட்டப் பொருளாளர் வி.மாரியப்பன், புற நகர் மாவட்டப் பொருளாளர் கே.பாண்டியன், மாநகர் துணைச் செயலாளர் எம்.சொர்ண வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் ஏ.பாண்டி நன்றி கூறினார்.