கடமலைக்குண்டு, ஜன.5- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தின் வைகை ஆற்றங்கரை யோரமாக 5.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக்கழிப் பறை கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கழிப்பறை அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறையின் வளாகம் முழுவதும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. ஒரு சில நேரங்களில் விஷப் பாம்புகளை கண்ட பொதுமக்கள் ஒருவித அச்சத்தோடு இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இது சம்பந்தமாக கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வா கத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை இப்பகுதி யை சீரமைத்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வா கம் தலையிட்டு கழிப்பறையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்று கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.