மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் - செந்தமிழ் கல்லூரியில் வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவர் ஆய்வு கருத்தரங்கில் மதுரை நம்பி எழுதிய ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ நூல் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் செந்தில் குமரன் தலைமை வகித்தார். நூலினை அறிமுகம் செய்து பூ.பாண்டிய முத்துக் குமரன் பேசினார், கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்திப் பேசினர். நூல் ஆசிரியர் மதுரை நம்பி ஏற்புரையாற்றினர். இதில் தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.