திருவனந்தபுரம், ஜன.20- வளர்ச்சியே நோக்கம், விவாதம் அல்ல என்று கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறினார். குதிரான் சுரங்கப்பாதை திறப்பது தொடர்பான விவாதத்துக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரியாஸ் மேலும் கூறுகையில், குதிரான் இரண்டா வது சுரங்கப்பாதையை திறப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு வருவ தாகவும் கூறினார். இரண்டாவது சுரங்கப் பாதை போக்குவரத்தை மாற்றியமைப்ப தற்காக மட்டுமே திறக்கப்படும் என்றும், சுங்கவரி வசூலிக்கப்படாது என்றும், அது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு தலைப்பட்சமான செய்திகள் வழங்குவதை சரி செய்ய வேண்டும். சுங்க கட்டணம் வசூலிக் கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கிறது. ஆனால், மாநில அரசு அவ்வாறு செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். வளர்ச்சிக்கான செயற்பாடுகளை ஒன்றி ணைந்து முன்னெடுத்துச் செல்வதே தீர்மானமாகும். இது போன்ற விஷயங்களில் மாநில அரசுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், மக்களுக்கு அனைத்தையும் தெரியப்படுத்த வேண்டும் என்றும், எனவே எடுத்த ஒருதலைப்பட்சமான முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார். அமைச்சர் கே.ராஜன் சாலைப்பணி நூறு சதவிகிதம் நிறை வடையாமல் சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒருதலைப்பட்ச மாக முடிவெடுப்பது சரியல்ல என்று வரு வாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் ஏற்க னவே கூறியிருந்தார். எந்த முடிவு எடுத்தாலும் அதை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒப்பந்த விதிக ளின்படி அதை ஏற்க முடியாது என்றும், மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜன் கூறியிருந்தார்.