திண்டுக்கல், பிப்.16- திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் சிபிஎம் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பழனி, ஆயக்குடி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று வாக்கு சேகரிப்பு சுற்றுப் பயணம் மேற் கொண்டார். பிரச்சாரத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாச மாக உள்ளது. அதிமுக கூட்டணி சிதைந்து போயிருக்கிறது என்பது மட்டுமல்ல. தோல்வி பயத்தில் எதை பேச வேண்டும் என்பதை தெரியா மலே அதிமுக தலைவர்கள் பேசி வரு கின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் நடைபெறுகிற சூழ் நிலையில், 2024ம் ஆண்டு சட்ட மன்றத்திற்கு தேர்தல் வரும் என்று அறிவித்திருப்பது வினோதமாக உள்ளது. அவர் அரசியல் சட்டத்தை படித்தி ருக்கிறாரா? ஒரு முதலமைச்சராக இருந்தவர் இப்படி பேசுவது எந்த வகையில் நியாயம்? கேட்டால் பிர தமர் மோடி சொன்னதாக விளக்கம் சொல்கிறார். 2024ம் ஆண்டு ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று அறிவிக்கப் போகிறோம் என்று மோடி அறிவித்தி ருக்கிறாராம். ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பதை யாராவது விவாதித்து இருக்கிறார் களா? நாடாளுமன்றத்தில் பேசப் பட்டிருக்கிறதா? சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளதா? இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த தேர்தல் பொருந்தி வருமா? என நிறைய கேள்விகள் உள்ளன. அப்படி இருக்கையில், மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்கி யது போல தமிழ்நாடு சட்டமன்றத்தை முடக்க வேண்டி வரும் என்று பேசு கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைவரா? பாஜக தலைவரா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்களில் அமோக வெற்றி பெறுவோம். இந்த நகரப்புற மற்றும் கிராமப்புற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமையும் உள்ளாட்சி களுக்கு அதிக அதிகாரங்களையும், நிதியையும் வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிற கட்சியாக எங்களது கட்சி இருக்கும். கேரளாவில் நாங்கள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிக அதிகார மும், நிதியும் ஒதுக்கியதால் தான் கொரோனா காலத்தில் மக்களைப் பாதுகாக்க முடிந்தது. இது தொடர் பாக ஐக்கிய நாடுகள் சபையே கேரள இடதுஜனநாயக முன்னணி அரசைப் பாராட்டியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமு லாக்க வேண்டும் என்று நாங்கள் ஏற் கனவே கோரிக்கை வைத்தோம். முத லமைச்சரை சந்தித்து முறையிட்டுள் ளோம். ஏற்கனவே அதிமுக ஆட்சி யில் அமைக்கப்பட்ட ரெங்கராஜன் தலைமையிலான குழுவிடமும் மனுக்கொடுத்து வலியுறுத்தினோம். அவரும் அதிமுக அரசுக்கு சிபாரிசு செய்தார். ஆனால் அதிமுக அரசு அமலாக்கவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகர்ப்புற உள்ளாட்சியில் அந்த திட்டத்தை நிறைவேற்ற 100 கோடியை ஒதுக்கி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அமலாக்க உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள் ளாட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும். தமிழக முதலமைச்சரும் அதை படிப் படியாக விரிவுபடுத்துவதாக தெரி வித்திருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகள் ஏதோ கௌரவ அமைப்பாக இல்லாமல் பெயரளவிற்கு அதிகாரம் கொண்ட அமைப்பாக இல்லாமல் அதிகாரி கள் கட்டுப்பாட்டில் செயல்படுகிற அமைப்பாக இல்லாமல் அதனை மாற்றி திமுக, சிபிஎம், மதச்சார்பற்ற கூட்டணி உள்ளாட்சியில் நல்லாட்சி மலர பாடுபடுவோம். உள்ளாட்சியில் அதிக அதிகாரங் கள் மற்றும் மக்களுக்கு தேவைப்படு கிற பெரும்பகுதியான காரியங்களை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிற எங்களுடைய உள்ளாட்சி பிரதிநிதி கள் குரல் எழுப்புவார்கள். அதை சட்ட மன்றத்தில் வலியுறுத்தி இதுவரை இல்லாத மக்கள் அக்கறையுள்ள உள்ளாட்சிகளாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின் போது, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.