மதுரை, ஜூன் 13- மதுரையில் செயல்பட்டு வரும் ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் பால் உற்பத்தி மையம் ஆகி யவற்றின் செயல்பாடு குறித்து ஜூன் 13 செவ்வாயன்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரடியாக ஆய்வு மேற் கொண்டார். ஆவின் வளாகத்தில் பால் உற்பத்தியாளர்களுடன் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 154 பயனாளிகளுக்கு ரூ. 55,37, 780 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தற்போது ஆவின் மூலம் நாளொன்றிற்கு 40 இலட்சம் முதல் 45 இலட்சம் லிட்டர் வரையில் பால் கையாளப்படு கிறது. இதனை 70 இலட்சம் லிட்டர் வரையில் உயர்த்துவதற்கு இலக் காகக் கொண்டு செயல்பட்டு வரு கிறோம். அதன்படி, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல் பட்டு வரும் உற்பத்தி மையங்களின் செயல்பாடு மற்றும் உட்கட்ட மைப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனம் ஆய்வு செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும், தமிழ்நாடு மாநில அளவிலும் தற் போது பால் உற்பத்தி குறைந்து வரு கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களை ஊக்கு வித்திடும் வகையில் கறவை மாடு கள் வாங்குவதற்கும், பராமரிப்ப தற்கும் கடனுதவி வழங்குதல், கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந் தீவனப் புல் வளர்ப்புக்கான விதை வழங்குதல், அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியா ளர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கு வித்தல் போன்ற பல்வேறு திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.
ஆவின் நிறுவனம் பால் உற் பத்தி மட்டுமல்லாது பாலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களான தயிர், மோர், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கி வரு கிறது. நடப்பாண்டில் இந்த பால் பொருட்களின் உற்பத்தி 10 சதவிகி தம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால் இப்பொருட்களின் தேவையும் நுகர்வோர்களிடையே அதிகரித்துள்ளது. சில இடங்களில் பால் பொருட்கள் தாமதமாக நுகர் வோர்களுக்கு சென்று சேருவதாக செய்திகள் உள்ளன. ஆவின் நிறு வனத்தில் தேவைக்கேற்ப மனித ஆற்றலை அதிகரித்து உரிய நேரத் தில் நுகர்வோர்களுக்கு பால் பொருட்கள் கிடைப்பதற்கு தேவை யான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் உற்பத்தி விவகாரம் தொடர் பாக முதலமைச்சர், இந்தியாவில் மாநிலங்களுக்குள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒருவருக்கு ஒருவர் பால் உற்பத்திப் பகுதி யை மீறாமல் பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறு வனம் மேற்கொள்ளும் நடவ டிக்கை மரபு மீறிய செயல் என சுட்டிக்காட்டி ஒன்றிய அரசிற்கு கடி தம் எழுதியுள்ளார்கள். பால் கொள் முதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை உயர்த்திட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார். இந்த நிகழ்வுகளின் போது, ஆவின் நிர்வாக இயக்குநர் மரு. எஸ்.வினீத், மாவட்ட ஆட்சித்தலை வர் மா.சௌ.சங்கீதா, சட்ட மன்ற உறுப்பினர்கள் கோ.தள பதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்க டேசன் (சோழவந்தான்) , மு.பூமி நாதன் (மதுரை தெற்கு), மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி உட்பட அரசு அலுவலர்கள், பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.