districts

img

சர்வதேச மகளிர் தின விழா

இராமநாதபுரம், மார்ச்.14- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், சிஎஸ்ஐ கல்வியி யல் கல்லூரியும் இணைந்து மகளிர் தின விழாவை நடத்தின.  சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப் பட்டன. வெற்றிபெற்ற மாணவிகளுக்கு  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கி.அன்னம்மாள் பரிசுகளை வழங்கினார்.  எழுத்தாளர் பேராசிரியர் மோகனா சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் மு.அய்யாச்சாமி, க.கல்பனா, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் கு.காந்தி, முனைவர் ஆனந்த், தமுஎகச மாவட்டத் தலைவர் முகவை அழகுடையான், மனநல மருத்துவர் ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் சத்தியேந்திரன், இ.பால கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்லூரி உதவிப் பேராசிரியர் பண்னைக்கரசி நன்றி கூறினார்.