districts

மதுரை முக்கிய செய்திகள்

காலமானார்

 இராமநாதபுரம்,டிச.13- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கிடாத் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த அங்கு முத்தம் மாள் காலமானார். இவர்  சிபிஎம் முதுகுளத்தூர் தாலுகா குழு உறுப்பினர் செ. முனிய சாமியின் தாயார் ஆவார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர். கருமலையான் , மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, தாலுகா செயலாளர் வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.கணேசன் மற்றும் டாக்டர் வான்தமிழ் இளம் பரிதி உள்ளிட்டோர் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை வைகை, பெரியாறு  அணைக்கு நீர்வரத்து

தேனி ,டிச.13- நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவ தால் வைகை ,பெரியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்து வருகிறது.  வைகை அணையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மழை குறைந்ததால் அணைக்கு  நீர்வரத்து சரிந்தது.  செவ்வாய்க்கிழமை காலை நிலவ ரப்படி  முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140.80 அடியாக உள்ளது. 541 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. 884 கன அடி நீர் வருகிறது. 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 433.28 மி.கன  அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லி யன் கன அடியாக உள்ளது. பெரியாறு அணை 4.6, தேக்கடி 2.4, சண்முகாநதி அணை 2.2, உத்தமபாளை யம் 1.2, போடி 3.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

கஞ்சா கடத்தியவர் கைது 

நத்தம், டிச.14- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்  பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற காரில் இருந்து  கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.   இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணை யில் சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த குணசேகரன், அம்சுபாண்டி மற்றும் அழகு ஆகிய மூவரை யும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலை மறைவாக உள்ளவர்களை கைது செய்ய காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்நிலையில் அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர், இவ்வழக்கில் தொடர்பு டைய சரவணன் என்பவரை வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலை மறைவாக உள்ள கணேசன், முத்துபாண்டி, அருண் பாண்டி ஆகிய மூன்றுபேரை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே  தொடர் விபத்து:  விவசாயி பலி  

தேனி ,டிச.13- தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார் . தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகில் உள்ள எரு மலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (51). இவர் தனது நண்பரான இளங்கோ (52) என்பவரு டன் இரு சக்கர வாகனத்தில்  அதிகாலை 5 மணியள வில் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது கடலூரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். பின்னால் அமர்ந்து வந்த இளங்கோ படுகா யத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.   இந்த விபத்து நடந்து சுமார் அரைமணிநேரம் கழித்து அதே இடத்தில் மற்றொரு விபத்து நடந்தது. விழுப் புரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை சுரேஷ்(25) என்பவர் ஓட்டி வந்தார். காரில் ஆறுமுகம்(40), மணிவண்ணன்(55), வீரப்பா(50), ராஜவேல்(30), குமரகுரு(45), முருக தாஸ்(25) ஆகியோர் வந்தனர். செங்குளத்துப்பட்டி பிரிவில் கார் திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் வந்த அனைவரும் இடிபாடிகளுக்குள் சிக்கி படு காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். டிரைவர் சுரேஷ் மற்றும் ராஜவேல் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கால்நடை மருத்துவ முகாம்

நத்தம், டிச,14 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி அணைமலைப்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் ஆலோ சனையின் பேரில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலை வர் கோகிலவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். சிறு குடி கால்நடை உதவி மருத்துவர் குமரேசன், செந்துறை, குட்டுப்பட்டி உதவி மருத்துவர்கள் மூலம்  சினை பரிசோ தனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச் சைகள் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப் பட்டது. முகாமில் சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயி களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விருதுநகரில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் காயம்

விருதுநகர். டிச.13- விருதுநகர் கடை வீதி அருகே  சந்திக் கூடத்தெருவில்  நடந்து சென்றவர்களை வெறிநாய் ஒன்று  கடித்ததில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் காயமடைந்தனர். விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது, இவை, வீதிகளில் நடந்து செல்வோரை அவ்வப்போது கடித்தும் வருகின்றன, இத னால். விருதுநகர் பொது மக்கள் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது, இந்தநிலையில் திங்களன்று இரவு கடை வீதி அருகே உள்ள சந்திக் கூடத் தெரு வில் நாய்களில் ஒன்றுக்கு திடீரென வெறி பிடித்தது, இதையடுத்து. அப்பகுதியில் நடந்து சென்ற சக்திதேவி(14) என்ற மாணவி, யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த சுவேதா(21), சந்தோஷ்குமார்(19).  மாரியம்மாள்(62), மேற்குரதவீதியைச் சேர்நத் அரிதாஸ்(13), அழகர்சாமித் தெருவைச் சேர்ந்த கோமதி(60), அல்லம் பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி(51). புதுத்தெருவைச் சேர்ந்த அதிசயமேரி(60), கொல்லர் தெருவைச் சேர்ந்த சண்முக வள்ளி(46) ஆகியோரை வெறிநாயானது கடித்துக் குதறியது, இதனால். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது, மேலும். அப்பகுதி வழியாக செல்வோர் வெறி நாயைக் கண்டதும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர், இதையடுத்து காயமடைந்தவர்கள் விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வந்தனர், பின்பு. காயமடைந்த வர்களுக்கு மருத்துவர் மற்றும் செவிலி யர்கள் வெறி நாய்க்கடி சிகிச்சைய ளித்தனர், இதேபோல் விருதுநகரில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெறிநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும். அவற்றை நகராட்சி நிர்வாகம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

ஒக்கரைப்பட்டியில் நிதி முறைகேடு  ஊராட்சி துணைத் தலைவர் உண்ணாவிரதம்

தேனி ,டிச.13- ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி ஊராட்சியில்  அம்பட்டையன்குளத்தில் படிக்கட்டு அமைத்ததாகக் கூறி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டி த்து துணைத் தலைவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி  ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரைப்பட்டி  ஊராட்சி  வேலுச்சாமிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பட்டையன் குளத்தில்  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் படிக்கட்டுகள் அமைத்ததாக கூறி  ஊராட்சி தலைவர் வீரஅழகம்மாள் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன் புகார் அளித்திருந்தார் . மேலும் ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் கடந்த செப்டம்பர் மாத வரவு செலவு  தொகையிலும் ,  அக்டோபர் மாத வரவு செலவு தொகையிலும் முறைகேடு  செய்ததாகவும்,  ஒக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தெருவில் 15வது நிதி குழு மானியத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் பைப்லைன் அமைத்ததாக கூறி ஊராட்சித் தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.   இது குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  குளக் கரையில் அமர்ந்து ஊராட்சி துணைத் தலை வர் மணிகண்டன்  உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார் . ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய  ஆணையாளர் மற்றும் ராஜதானி காவல்துறையினர்  சமரச பேச்சுவார்த்தை யில்  ஈடுபட்டனர் .அதனைத் தொடர்ந்து அவர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டார்.

மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது 

மதுரை, டிச.13- மதுரை மாநகர் எஃப் எஃப் ரோடு  தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவரது மகள் நாகரத்தினம் பிரபாகரன் என்பவரை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆத்விக் என்ற இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது மகள் நாகரத்தினத்திற்கும் தமிழ் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் செய்ய  பாலசுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார். திங்களன்று  காலை விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வந்த பாலசுப்பிரமணியன், அவரது மகள் நாகரத்தினம், குழந்தை ஆத்விக் ஆகியோருடன்  தமிழ் என்பவரும்  வந்துள்ளார். இதைக்கண்டு  ஆத்திரமடைந்த  பிரபாகரன்  அவரது நண்பர்கள் மகாலிங்கம் , பாலகிருஷ்ணன் ஆகியோரு டன் சேர்ந்து மது அருந்திவிட்டு அன்று இரவு தெற்கு வாசல் எஃப் எஃப் ரோடு நாடார் வித்யாலயா சாலை அருகே சென்று கொண்டிருந்த தனது மாமனார் பாலசுப்பிர மணியனை மூவரும் இரும்புராடால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.  இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல்துறை யினர் பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரனை தெற்குவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவரது நண்பர்க ளான பாலகிருஷ்ணன், மகாலிங்கம் மற்றும் இளம்சிறார் ஒருவர் உள்ளிட்ட 3பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

கொடைரோடு அருகே  சிறுமி மர்ம மரணம்

 சின்னாளப்பட்டி, டிச.13- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த மெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்-வசந்தி தம்பதியரின் 7-வயது சிறுமி யுகந்திகா. இவர செவ்வாயன்று காலை வீட்டில் விளையா டிக்கொண்டிருந்தார். பின்னர்  காணாமல் போனதாக வும் தேடியபோது வீட்டின் பெட்ரூமிலுள்ள ஜன்னல் கம்பி யில் கட்டப்பட்ட துப்பட்டாவில் சிறுமி யுகந்திகாவின் கழுத்து இறுக்கப்பட்டு தொங்கிய நிலையில் கிடந்த தாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட தாய் வசந்தி அலறி யடித்துக் கொண்டு ஓடி  துப்பட்டாவை அறுத்து மகளை நிலக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள் ளார். சிறுமி யுகந்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை அமைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி நிலக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் வாங்கிய  கிராம நிர்வாக அலுவலர் கைது

சிவகாசி, டிச.13- சிவகாசி அருகே பட்டா வழங்க ரூ.5 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரித்தீவ் ராஜ். இவர் பட்டா வழங்கக் கோரி  விண் ணப்பம் செய்துள்ளார். அதற்கான பரிந்துரையை செய்யா மல் கிராம நிர்வாக அலுவலர் உமாவதி காலம் தாழ்த்தி  வந்துள்ளார். எனவே, அவரிடம் நேரில் சென்று பிரித்தீவ் ராஜ் விபரம் கேட்டுள்ளார். அப்போது,  கிராம நிர்வாக அலுவலர் உமாவதி  மற்றும் உதவியாளர் பொன்ராஜ் ஆகிய இருவரும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து, லஞ்சம் தர மன மில்லாத  பிரித்தீவ்ராஜ்,  லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.  பின்பு,  லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலேசானைப் படி, ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரித்தீவ் ராஜ், விஏஓ உமாவதியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் உமாவதி மற்றும் உதவி யாளர் பொன்ராஜ் ஆகிய இருவரையும் கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர்.  

காரில் கடத்திய  போதை பொருட்கள் பறிமுதல்:  ஒருவர் கைது 

 திருவில்லிபுத்தூர்,டிச.14-  திருவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் பட்டி காவல் சார்பு ஆய்வாளர்  நமச்சிவாயம்  வாகனச்  சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கார் ஒன்று வேகமாக திருவில்லி புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் புகை யிலை மற்றும் பாக்கு பொட்டலங்கள் 71 கிலோ இருப்பது  தெரிய வந்தது. இது குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு  பதிவு செய்து காரை ஓட்டி வந்த தென்காசி வீரகேரளம் புதூரைச் சேர்ந்த  மரிய அருள் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.  அவர், போதை பொருள்களை மதுரை ரயில் நிலை யம் அருகே  அடையாளம் தெரியாத நபரிடம் வாங்கிக் கொண்டு தனது ஊருக்கு கொண்டு சென்று சிறிது சிறிது விற்பதாக கூறினார். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வாங்க பணம்  தராததால் ஆத்திரம்  தாயை கொலை செய்த  மகன் கைது

 தேனி ,டிச.13- பெரியகுளம் அருகே கஞ்சா வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன், தாயை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பெரியகுளம் மஞ்சளாறு அணை  காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மனைவி ஜோதி(45) கூலித் தொழிலாளி.திருமணமாகி 27ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு விருமாண்டி(26), மருதுபாண்டி(24), சிவபாண்டி(22) என்று மூன்று மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகவில்லை. இதில் இரண்டாவது மகன் மருதுபாண்டி கஞ்சா, மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். செவ்வாய்க்கிழமை  காலை ஜோதியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு ஜோதி போதைபழக்கத்தை மறந்து வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இருப்பினும் மருதுபாண்டி தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இருப்பினும் பணம்தராததால் கோபமடைந்த மருது பாண்டி தனது தாய் ஜோதியை கோடாரியால் தாக்கினார். பலத்த காயமடைந்த ஜோதி 108ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து மருதுபாண்டியை தேவதானப்பட்டி காவல் துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளை நிலங்களில் கல்குவாரி அமைப்பதை தடை செய்க!  விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விருதுநகர், டிச.13- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தனியார் சிமிண்ட் ஆலை நிர்வாகம், விளை நிலங்களில் கல்குவாரி  அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென  மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர் அம்மனுவில்,  திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டி கிராமத்தில் ராம்கோ சிமிண்ட் ஆலை நிர்வாகத்தினர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினர். இதுகுறித்து விசாரித்த தில் அங்கு கல்குவாரி அமைக்கப் போவதாக தெரி வித்தனர். கல்குவாரி அமைத்தால் சுத்தமடம், வடக்கு நத்தம், போத்தம்பட்டி, தெற்கு நத்தம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதி களில் உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கும். மேலும் நிலங்களை முறையாக வாங்கவில்லை. அதில் முழு மையாக விளையும் நிலங்களும் உள்ளன. கல்குவாரி அமைத்தால் சுற்றுச் சூழல் மாசுபடும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.