திருப்பூர், ஜூன் 26 - திருப்பூரில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாநகர காவல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர காவல் ஆணை யர் பிரவீன் குமார் அபினபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் மற்றும் கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.சி. அரசு மேல்நிலை பள்ளியில் மாநகர காவல் ஆணை யர் பிரவீன் குமார் அபினபு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாணவர்கள் மத் தியில் போதை பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட் டது. தொடர்ந்து பேரணியை மாநகர காவல் ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத் தார். பேரணியில் போதை பொருளால் ஏற்பட கூடிய விளைவுகள் குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி முக்கிய வீதிக ளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணை யர் வனிதா, உதவி ஆணையர் கார்த்திகே யன், காவல் ஆய்வாளர்கள் கணேசன், சிவ சங்கரி உள்ளிட்ட காவலர்களும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். தாராபுரம் அதேபோல், தாராபுரம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு போதை பொருட்க ளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதைதொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வா ளர் மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி கல்லூரியில் துவங்கி என்.என் பேட்டை வீதி, பெரியகடைவீதி வழி யாக அண்ணாசிலை முன்பு முடிவடைந் தது. பேரணியில் கல்லூரி மாணவர்கள் விழிப் புணர்வு தட்டிகளை ஏந்தி பொதுமக்களுக்கு துண்டறிக்கை விநியோகித்தனர்.