districts

img

பொருநை புத்தக திருவிழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி, மார்ச் 12- பாளை வ.உ.சி. மைதானத் தில் மார்ச் 17-ஆம் தேதி பொருநை புத்தக திருவிழா தொடங்கவுள்ளது. இதனை யொட்டி அங்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி பெரு மாள் ஆய்வு செய்தார். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதா னத்தில் 5-ஆவது புத்தகத் திரு விழா மார்ச் 17-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்படு கிறது. இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார் பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்கவுள்ள னர். இதில் கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், அரசு துறைகளில் வேலை வாய்ப்பிற்கான வழி காட்டி புத்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. அனைத்து புத்தகங்களுக் கும் 10 சதவீத தள்ளுபடியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெகிழி இல் லாத புத்தக திருவிழாவாகவும் நடத்தப்படுகிறது.  மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றத்தினை எதிர்கொள்வது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திடும் வகையில் நெல்லை நீர்வளம்- தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கப்படுகிறது. மேலும் நாட்டுப்புற கலைகளை உலகறிய செய்யும் வகையில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாட்டை விளக்கும் வகை யில் தலைசிறந்த பேச்சா ளர்களின் சிறப்புரைகளும் நாள்தோறும் இடம்பெறுகிறது. மேலும் தமிழக அரசு பல்வேறு துறைகள் வழியாக செயல் படுத்தி வரும் முக்கிய திட்டங்க ளான மக்களை தேடி மருத்து வம், இல்லம் தேடி கல்வி, வருமுன் காப்போம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள், பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக் கப்பட்டு வருகின்றன.