மதுரை, மார்ச் 24- பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்வது என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவை கண்டித்தும், எல்.ஐ.சி பங்கு விற்பனை தேச நலனுக்கு எதிரானது எனவும், பங்கு விற்பனையை கைவிடக் கோரியும் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு கேரள சட்ட மன்றத் தீர்மானம் பெரும் உத் வேகத்தையும் உற்சாகத்தை அளித்தது. கேரள இடது ஜனநாயக முன் னணி அரசின் இந்த நடவடிக்கை யை பாராட்டி, செவ்வாயன்று மதுரை வந்திருந்த கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பால கோபால் அவர்களை எல்.ஐ.சி ஊழியர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தனர். எல்.ஐ.சி பங்கு விற்பனை யில் ஒன்றிய அரசாங்கம் மிக முனைப்போடு உள்ளதென்றா லும், அதற்கு எதிராக மக்கள் கருத்தை திரட்டுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும் என்று காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். இந்த சந்திப்பில் மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின். தலைவர்கள் ஜி. மீனாட்சி சுந்தரம், என்.பி. ரமேஷ் கண்ணன், எல்.ஐ.சி தென் மண் டல உழைக்கும் மகளிர் துணைக் குழு இணை அமைப்பாளர் ஜே. விஜயா உள்பட முன்னணி செயற் பாட்டாளர்கள் பங்கேற்றனர்.