districts

img

சிவகங்கை மாவட்டத்தில் 8,553 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கு காப்பீட்டுத்தொகை வழங்கல்

சிவகங்கை, அக்.5- சிவகங்கை மாவட் டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 8553 பேருக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 675 மருத்துவ செலவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் முதல மைச்சர் மருத்துவ காப்பீடு, பிரதமமந்திரி ஆரோக்கிய திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை,சிறப்பாக பணிபுரிந்த மருத்துவ மனைகள் சார்ந்த மருத்து வர்களுக்கு கேடயம் பாரா ட்டு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மது சூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இத்திட் டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் இணைய தளத்தில் பதிவு செய்து காப்  பீட்டு அட்டை பெற்று பயன்  பெறுங்கள் என்று அமைச்சர் கூறினார்.  முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு  திட்டத்தில் சிறப்பாக பணி யாற்றிய 6 அரசு,தனியார் மருத்துவமனைக்கும்,7 காப்  பீட்டு திட்ட தொடர்பு அலு வலர்கள் ஆகியோருக்கு கேடயம்,பாராட்டு சான்றி தழ்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கி பாராட்டி னார்.  இந்நிகழ்வில் காரைக்  குடி சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி, நகர்மன்றத்  தலைவர் முத்துதுரை, மருத்துவ இணை இயக்கு நர் இளங்கோ, சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்  வர் ரேவதி,நகர் மன்ற துணைத் தலைவர் குணசேக ரன், நகர்மன்ற ஆணையா ளர் லெட்சுமணன், வட் டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்  டனர்.