இராஜபாளையம், செப்.18- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அரசு விதைப் பண்ணையில் ஸ்டா மின் இயக்குநர் முனைவர் சங்கரலிங்கம் மற்றும் வேளா ண்மை இணை இயக்குநர் விஜயா, மாநில திட்ட துணை இயக்குநர் முத்துலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட னர். தேவதானம் அரசு விதைப்பண்ணையில் வேளாண் காடுகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சிறிய நாற்றங்கால் அமைத்ததையும், தேவதானம் கிராமத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தக்கை பூண்டு விதைத்த வயலினையும் ஆய்வு செய்தனர். இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திரு மலைச்சாமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் உட னிருந்தனர்.