districts

img

உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க ஆணையத்திடம் வலியுறுத்தல்

மதுரை, மார்ச் 9- உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரி யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்ட அரசா ணையை மறுபரிசீலனை செய்வது குறித்து  அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று  மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் தே.விமலநாதன், உதவி ஆணையர், மதுரை மாநகராட்சி சுகாதா ரத்துறை ஆணையாளர், மதுரை மாவட்ட தொழிலாளர்துறை இணை ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி,  விசிக, தமிழ்நாடு  சுகாதாரப் பணியாளர்  சங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள்- ஆணை யத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதி நிதிகள், “தொழிலாளர்கள் சம்பளத்தில்  ஒப்பந்ததாரர்கள் பெரும் முறைகேடு களைச் செய்து வருகிறார்கள். அதை  ஆணையம் ஆய்வு செய்து அவர்களு டைய ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு- போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு கழிப்பறை வசதியை அவர்கள் பணி செய்யும் பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  துப்புரவுத் தொழிலாளர்கள் அடிமை களைப் போல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள் ளது  அதிகாரிகளின் சொல்லுக்குக் கீழ்ப்படியாவிட்டால் தண்டிக்கப்படுவது அல்லது பணி தர மறுப்பது போன்ற செயல்களில் அதிகாரிகள்- மேஸ்திரிகள் ஈடுபடுகிறார்கள். இந்தப் பிரச்சனைகளை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்”.

ஆணையத்திடம்  மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் கோரிக்கை மனு அளித்தார். அப்போது மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர்  கருப்பசாமி, மதுரை மாவட்ட ஊராக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்டப் பொதுச் செய லாளர் பொன். கிருஷ்ணன் ஆகியோர் உட னிருந்தனர். மனுவில், “கடந்த 2017- ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி  பிறப்பித்த குறைந்தபட்ச ஊதிய அரசா ணையின் படி தூய்மைத் தொழிலாளர் களுக்கு (தினச்சம்பளம் ரூ.721, பொறி யியல் பிரிவில் பணிபுரியும் பாதாளச் சாக்கடை-பிட்டர்கூலி-கழிவு நீரேற்று நிலையம்-கனரக வாகனம்-எல்சிவி வாகன ஓட்டுநர்கள்- அனிமேட்டர்கள்-வாட்ச்மேன் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளர்களுக்கு  ரூ.850. தினக்கூலி வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.900 வழங்க வேண்டும்.  இவர்களுக்கு  பஞ்சப்படியும் வழங்கவேண்டும்  அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, பிள்ளைகளின் கல்வி, மருத்துவச்செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு  தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். பொறியியல் பிரிவு- பாதாளச் சாக்கடை-பிட்டர்கூலி-கழிவு நீரேற்று நிலையம்- கனரக வாகனம்- எல்சிவி வாகன ஓட்டுநர்கள்-அனிமேட்டர்கள்- வாட்ச்மேன் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியா ளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 27,500  நிர்ணயிக்க வேண்டும். தினக்கூலி வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ.29 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.