விருதுநகர், டிச.7- விருதுநகர் அருகே செவல்பட்டியில் அனைவ ருக்கும் வீடு வழங்கும் திட்டத் தின் கீழ் வீடுகளை கணக்கெ டுக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத் தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, குடி சையில் வாழும் குடும்பங் கள், நிலைத்த தன்மையற்ற வீடு, வாழ தகுதியற்ற வீடு களில் வசிக்கும் குடும்பங்க ளின் விவரங்கள் கணக்கெ டுக்கப்பட உள்ளது. தென் னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் அல்லது இதர ஓலைகளை கொண்டு கூரை வேயப்பட்ட வீடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரை வீடுகள் கணக்கெடுப்புக்கு தகுதி யான வீடுகளாகும். மண், சுடப்படாத செங்கல், மண் கலவையுடன் கூடிய கருங் கல், சிமெண்ட் பலகை போன்ற நிலைத்த தன்மையற்ற சுவர் களை கொண்ட ஓட்டு வீடு களில், சுவர் நல்ல நிலையில் இல்லாத வீடுகளும் கணக் கெடுக்கப்படும்.
மேலும், வாடகைக்கு வசிக்கும் குடும்பங்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், ஊரக பகுதி களில் இலவச வீட்டுமனை பட்டா பெற்று வீடு கட்ட இய லாத குடும்பங்கள் ஆகி யவையும் கணக்கெடுக் கப்பட உள்ளது. கிராம ஊரா ட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி அள விலான கூட்டமைப்பின் பிரதி நிதி ஆகிய 5 பேர் குழுவாக கணக்கெடுப்பு பணி மேற் கொள்ளப்படவுள்ளது. இப்பணியானது, வரும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடிக்கவும்,இதுகுறித்து ஆய்வு செய்யும் பணி வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்குள் ளும், பட்டியலை இறுதி செய் யும் பணி ஜனவரி 17 ஆம் தேதிக்குள்ளும் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட பட்டியல் ஜன வரி 18- 25 வரை அந்தந்த கிராம ஊராட்சி அலுவல கங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இது குறித்த தீர்மானம் குடி யரசு தினத்தன்று அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை சட்டத்தில் நிறை வேற்றப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் திலகவதி, ஊராட்சிமன்றத் தலைவர் இ.செல்வி, கிராம நிர்வாக அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.