சென்னை, மார்ச் 10- தமிழகத்தில் அனைத்து தரப்புக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான சுகாதார சேவைகள் உரிமை சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சுகாதார சேவைகள் உரிமைச் சட்ட முன்வடிவு குறித்த கலந்தாய்வை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழக சுகாதாரத் துறையின் சாதனையாக இன்னொரு புதிய திட்டத்துக்கான சுகாதார சேவைகள் உரிமைச் சட்ட முன்வடிவு ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற வகையில் பொருளாதார நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. குழந்தை கள், வயதானவர்கள், மகளிர், மன வளர்ச்சிக் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் என எல்லாத்தரப்பின ருக்கும் போதுமான அளவு சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான உரிமை ஆகும். அந்த உரிமைகளை நிறைவேற்றுவதற்கான கடமையும் அதை உணர்த்துவதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வுள்ளது. இதேபோல், சட்டமுன்வடிவு தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் அஸ்ஸாமில் அமலில் வந்து இருந்தாலும், இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
எனவே, இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டு இருக்கி றது. தேசிய சூழ்நிலையில், தமிழகம் ஏற்கெனவே நாட்டின் பல்வேறு சுகாதார அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின் மூலம் இதுவரை 59 லட்சத்து 98,325 பேர் பயனடைந் துள்ளனர். 2021 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தால் சாலைகளில் விபத்துக் குள்ளானவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் சுகாதார சேவை களை வலுவடைய செய்யும் வகையில் இந்த சுகாதார சேவைகள் உரிமைச் சட்ட முன்வடிவு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், சிறப்பு அலுவலர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டேரஸ் அகமது, மருத்து வக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநா யகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.