மதுரை, மார்ச் 20- 2023-24-ம் ஆண்டிற்கான தமி ழக பட்ஜெட் அனைத்துத் தரப்பின ரையும் திருப்திப்படுத்தும் வகையி லும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக் கும் வகையிலும் அமைந்துள் ளதை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பாராட்டி வரவேற்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என். ஜெக தீசன் திங்களன்று வெளியிட்ட அறிக்கை: தென் தமிழக தொழில் வளர்ச்சிக்கு முக்கிய கட்டமைப் பான மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், மதுரையின் போக்குவரத்து நெருக் கடியை தீர்க்கும் வகையில் முதல் கட்டமாக 31 கிலோமீட்டர் தூரத் திற்கு மெட்ரோ இரயில் திட்டம் 18 மாதங்களில் முடிவடையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த பட்ஜெட்டில் மதுரையில் மெட்ரோ இரயில் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரை மேம்படுத்த எழில்மிகு மாமதுரை திட்டம், 3.5 லட்சம் புத்தகங்களுடன் மதுரை யில் உருவாக்கப்பட்டு வரும் தென்தமிழகத்தின் ஓர் அடையாள மாக திகழப்போகும் கலைஞர் நினைவு நூலகம் அவரது நூற்றாண்டு பிறந்த நாளான வரும் ஜூன் 3-ம் நாள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும், 2.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விருதுநகரில் சிப்காட் ஜவுளி பூங்கா துவக்கப்படும் என்ற அறிவிப்பும், மதுரை உள்ளிட்ட நக ரங்களில் முக்கிய பொது இடங்க ளில் இலவச வைபை திட்டம், தமி ழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் புத்தகத்திருவிழா நடத்தப் படும் என்பன அறிவிப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்க தாகும். மின் பற்றாக்குறை உள்ள மாநிலமான தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க 14,500 மெகாவாட் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு ரூ.77ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்ற அறிவிப்பும், பசுமை மின் வாகன உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தமிழகத்தை மின்வாகன உற்பத்தியில் முதலிடத்திற்கு கொண்டுவரப்படும் என்ற அறி விப்பும், குறிப்பாக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகன உற்பத்தியில் 46 சதவீதம் தமிழ கத்தில் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது என்ற தகவலும் மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமப்புறங்களில் வசிக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கானோ ருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கக்கூடிய வகையில் ரூ. 800 கோடி செலவில் 10ஆயிரம் குளங்கள் தூர்வாரப்பட்டு புதுப் பிக்கப்படும் என்ற அறிவிப்பும், கட்டட அனுமதி இனி ஆன்லைன் மூலமாகவே கிடைக்கும் என்று அறிவிப்பும், வருவாய் பற்றாக் குறை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.16,000 கோடி குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற் கத்தக்கது.
ஏமாற்றம்
தென் தமிழகத்திற்கு மிக முக்கி யக் கட்டமைப்பான மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற் குத் தேவையான அண்டர்பாஸ் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக் கப்படாததும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை வெகுவாக பாதிக்கக்கூடிய அபரிமிதமான மின் கட்டண உயர்வு குறைக்கப் படாததும், தென் தமிழக தொழில் வணிகத் துறையினருக்கு ஏமாற் றம் அளிப்பதாகவே உள்ளது. ரூ.100 கோடி செலவில் 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டா ளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுவிட்டதால் சென்னையை தவிர்த்து இரண்டா வது பெரிய நகரமான மதுரையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும். தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அந்தந்த துறை சார்ந்த மானிய கோரிக்கை விவா தங்களின் போது இது குறித்து உரிய நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தென் தமிழக தொழில் துறையின ரிடம் உள்ளது.
வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம்
“நிதி நிலை அறிக்கை அனைத்து மாவட்டங்களின் சமச்சீர் வளர்ச்சியை உள்ளடக்கி மாநி லத்தை தெளிவான வளர்ச்சி பாதை யில் வழிநடத்தி செல்லும் எனப் பாராட்டியுள்ள வேளாண் உணவு தொழில் வர்த்த சங்கத்தின் தலை வர் எஸ்.இரத்தினவேல், “வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கையான ‘ஜிஎஸ்டி உயர்மட்ட ஆலோச னைக் குழு’ இந்த பட்ஜெட்டில் அறி விக்கப்படாதது ஏமாற்றமாக உள்ளது. ஜிஎஸ்டி-யின் குழப்ப மான மற்றும் சிக்கலான அமலாக் கத்தால் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். அவற்றை, அமலாக்க விதி முறைகளை வகுப்பவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிஎஸ்டி கவுன்சிலில் முன் வைக்க வேண் டிய கோரிக்கைகள் குறித்து விவா தித்து முடிவெடுக்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரதிநிதி களைக் கொண்டு நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி உயர்மட்ட ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.