districts

img

கன்னியாகுமரி மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில், நவ.12-  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. மூன்று அணைகளில் இருந்து 1036 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரண்டு வாரங்களாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் வெள்ளி யன்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் நகரில் சாலைகளும் குடியிருப்புப் பகுதி களிலும் மழை-வெள்ளம் புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில்  வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற் பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்துக் கொட்டுகிறது. இதை யடுத்து 14-ஆவது நாளாக அருவி யில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்ற மடைந்தனர். அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 41.26 அடியாக இருந்தது.

அணை க்கு 477 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 536 கனஅடி உபரி நீர்  வெளியேற்றப்பட்டது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 69.77 அடி யாக இருந்தது. அணைக்கு 349 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. ரப்பர் உற்பத்தி பாதிப்பு சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.08 அடியாக உள்ளது. அணைக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணை களில் இருந்தும் 1036 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது. தொடர் மழைக்கு தோவா ளை தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. தொடர் மழை யின் காரணமாக ரப்பர் பால் உற் பத்தி செங்கல் உற்பத்தி அடி யோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலையின்றி தவித்து வரு கிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு: பேச்சிப்பாறை-3.4 மி.மீ, பெருஞ்சாணி-8.2, சிற்றாறு-1-2, சிற்றார்-2-4.2, பூதப்பாண்டி-20.2, களியல்-31, கன்னிமார்-6.8, கொட்டாரம்-2.8, குழித்துறை-22.4, மயிலாடி-5.2, நாகர்கோவில்-31.4, சுருளோடு-8.6, தக்கலை-6.3, மாம் பழத்துறையாறு-20, ஆரல்வாய் மொழி-10, அடையாயமடை-33, குருந்தன்கோடு-9.8, முள்ளங்கினா விளை-6.8, ஆணைக்கிடங்கு-19 மி.மீ.