பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, மார்ச் 25- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் சாரல் மழை கார ணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்த மழை யால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 50 கன அடியில் இருந்து 259 கன அடியாக உயர்ந்துள்ளது. 256 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது. 106 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 43.29 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழையளவு பெரியாறு 14.6, தேக்கடி 1.4, கூடலூர் 1.2, சண்முகா நதி 2, போடி 1.4, சோத்து ப்பாறை 1.6, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
‘விவசாயிகளிடம் ரூ.35.67 கோடிக்கு 19122 மெ.டன் நெல் கொள்முதல்’
விருதுநகர், மார்ச்.25- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவ சாயிகளிடம் நிகழாண்டு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் இது வரை 19,122 மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி அவர் களது வங்கிக் கணக்கிற்கு வரவு வைக் கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் தொடர்பாக புகார்கள் ஏதுமிருப்பின் இலவச தொலைபேசி எண். 1077 மற்றும் துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் விருதுநகர் தொலைபேசி எண். 04562-252607 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என வும் குறிப்பிட்டுள்ளார்.
போடி அருகே பள்ளமான சாலையால் விபத்து ஆட்டோவிலிருந்து விழுந்து பெண் தொழிலாளி பலி
தேனி, மார்ச் 25- போடி அருகே சனிக் கிழமை, மேடு பள்ளமான சாலையில் ஆட்டோவிலி ருந்து கீழே விழுந்து பெண் தொழிலாளி இறந்து போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி தர்மம்மாள் (59). இவரும், இதே ஊரைச் சேர்ந்த சிலரும் ஒரு ஆட்டோ வில், பெருமாள்கவுண்டன் பட்டி அருகே கண்ணன் என்ப வரது தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து அதே ஆட்டோவில் ஏறி மீண்டும் மீனாட்சிபுரம் வந்துள்ளனர். மீனாட்சிபுரம் கிராமத்திற் குள் நுழையும்போது புதி தாக பாலம் கட்டப்பட்டுள் ளது. இதில் சாலை போடாத தால் குண்டும் குழியுமான சாலையில் ஆட்டோ சென் றுள்ளது. ஆட்டோவில் இருக்கை ஓரத்தில் அமர்ந்திருந்த தர் மம்மாள் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து பலத்த காய மடைந்தார். அவரை போடி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு தர்மம் மாள் இறந்தார். இதுகுறித்து கன்னியப்பன் கொடுத்த புகா ரின் பேரில் மேடு பள்ளத்தில் கவனக்குறைவாக ஓட்டிய தாக ஆட்டோ ஓட்டுநர் இதே ஊரைச் சேர்ந்த பெரியாண்டி மகன் சேகர் (43) என்பவர் மீது போடி தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்
மதுரை, மார்ச் 25- தமிழ்நாடு காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் காலை 8.30 மணிக்கு தொடங்கி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியானநபர்கள் நுழைவுப்படிவம் பெற்று வருகைப்பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண் டும். முகாமில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்க ளது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் பலி
கடமலைக்குண்டு, மார்ச் 25- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த வர் பாலமுருகன் (வயது 28). இதே கிராமத்தை சேர்ந்த இவ ருடைய நண்பர் யோகேஷ் (24). இருவரும் வெள்ளிக் கிழமை மதியம் மயிலாடும்பாறையில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு போதையில் மீண்டும் மது பாட்டில்கள் வாங்குவதற்காக மூலக்கடை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருவரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பாலமுரு கன் ஓட்டி சென்றார். மயிலாடும்பாறை காவல் நிலையத்தை கடந்து சாலை வளைவில் பைக் நிலை தடுமாறி அருகே இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவ ருக்கும் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் செல்லும் வழியில் பால முருகன் உயிரிழந்தார். யோகேஷ்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலி பட்டா வழங்கியதாக துணை வட்டாட்சியர் கைது
மதுரை, மார்ச் 25- மதுரை தபால் தந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி லால். இவர் ஆனையூரைச் சேர்ந்த சையது அபுதாகீர் என்ப வரிடம் 1990 ஆம் ஆண்டு காலி மனையை வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், கோபிலால் தற்போது வசித்து வரும் நிலம் ராஜா செல்வராஜ் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டி ருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கோபிலால் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் நில அபகரிப்பு பிரிவில் 2021இல் புகார். அளித்தார். இதையடுத்து புகார் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், ராஜா செல்வராஜ் பெயரில் பட்டா மாறு தலை கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வன், கிராம உதவியாளர் பால்பாண்டி மற்றும் அப்போதைய துணை வட்டாட்சியர் மீனாட்சிசுந்தரம் வழங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோசடியாக பட்டா பெற்ற ராஜாசெல்வ ராஜ், தற்போது மதுரை மேற்கு தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் ஆகி யோர் மீது நில அபகரிப்புப் பிரிவு காவல்துறையினர் முறை கேடு வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மீனாட்சி சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
இராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், மார்ச் 25- காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்த பாஜக அரசைக் கண்டித்து இராமநாத புரம் அரண்மனை முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார் பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் -முன்னாள் எம்எல்ஏ மலேசிய பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் பாபு, ராஜாராம் பாண்டி யன் ( நகராட்சி கவுன்சிலர்) முன்னிலை வகித்தனர். மகிளா காங்கிரஸ் தலைவர் என். ராமலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
கூடலூரில் வரதட்சணை கொடுமை: காவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு
தேனி, மார்ச் 25- தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர் சுகன்யா(28). இவரது கணவர் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன். இவர்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்து, ஒரு குழந்தை உள்ளது. பிரபா கரன் உத்தர்காண்ட் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை பிரிவில் காவ லராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பிரபாகரன் சுகன்யாவை அவரது பெற்றோரிடம் கேரளத்தில் சொத்து வாங்குவதற்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் வாங்கி வருமாறு கூறினார். தனது பெற்றோரிடம் பணம் இல்லை என்று சுகன்யா கூறியதால் பிரபாகரன், அவரது தந்தை சன்னாசியப்பன், தாயார் ஜெயா, சகோதரர்கள் மணிவாசகர், அவரது மனைவி ரேகா, சிவக்குமார், அவரது மனைவி நிவேதா ஆகியோர் தன்னை கொடு மைப்படுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றியதாக தேனி மகளிர் காவல் நிலையத்தில் சுகன்யா புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படை யில், பிரபாகரன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ரயில்
மதுரை, மார்ச் 25- இந்தியாவில் உள்ள பண்பாட்டு, கலாச் சார மையங்களை சுற்றிப் பார்க்க “பாரத் கௌரவ்” என்ற சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இதை யடுத்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வருகிற மே மாதம் திரு வனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு “பாரத் கௌரவ்” சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. மே 4 அன்று திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா ரயில் கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளை யம், விருதுநகர், மதுரை வழியாக சென்று மே 6 அன்று ஒடிசா மாநிலம் பூரி சென்று சேரும். பூரியில் ஜெகநாதர் கோவில் மற்றும் கொனார்க் சூரிய கோவில் தரிசனம். மே 8 அன்று கொல்கத்தாவில் காளி கோவில் தரி சனம். மே 9 அன்று பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜைக்கு பிறகு மகா போதி கோவில் தரிசனம். மே 10 அன்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசா லாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம். மே 11 அன்று அயோத்தியா சரயு நதியில் நீராடி ராமஜென்ம பூமி மற்றும் அனுமன் கோவில்கள் தரிசனம். மே 12 அன்று பிரக்யா ராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனு மன் கோவில் தரிசனம் முடித்து மே 14 அன்று சுற்றுலா ரயில் கொச்சுவேலி வந்து சேரும். இந்த ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டுகள் பதிவு செய்ய இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக அலுவலர்களை 8287931977 & 82879 32122 என்ற அலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.